பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/18

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

சங்க இலக்கியத்

“உவர் எழுகளரி ஓமை அம்காட்டு
 வெயில் வீற்றிருந்த வெம்பு அலை அருஞ்சுரம்”
—நற். 84:8-9

“உமணர் சேர்ந்து கழிந்த மருங்கின் அகன்றலை
 ஊர்பாழ்த்தன்ன ஓமை அம்பெருங்காடு”
—குறுந். 124:1-2

“புன்தாள் ஓமைய சுரன் இறந்தோரே”—குறுந். 260: 7-8

“கானயானை தோல் நயந்து உண்ட
 பொரிதாள் ஓமை வளிபொரு நெடுஞ்சினை
 அலங்கல் உலவை ஏறி”
—குறுந். 79: 2-4

“.... .... .... .... .... .... .... .... .... .... .... ஐயநாம்
 பணைத்தாள் ஓமைப்படு சினை பயந்த
 பொருந்தாப் புகர் நிழல் இருந்தனமாக”
—நற். 318: 1-3

“உலறுதலைப் பருந்தின் உளிவாய்ப் பேடை
 அலறுதலை ஓமை அம்கவட்டு ஏறி
 புலம்பு கொள விளிக்கும் நிலம் காய் கானத்து”
—குறுந். 321: 1-3

“சேயின் வரூஉம் மதவலி யாஉயர்ந்து
 ஓமை நீடிய கானிடை அத்தம்”
—நற். 198: 1-2

“அத்தஓமை அம்கவட்டு இருந்த
 இனம் தீர்பருந்தின் புலம்புகொள் தெள்விளி
 சுரம் செல்மாக்கட்கு உயவுத்துணை ஆகும்”
—குறுந். 207: 2-3

“.... .... .... .... .... .... .... .... .... முளி சினை
 ஓமைக்குத்திய உயர்கோட்டு ஒருத்தல்”
—குறுந். 396: 3-4

“பெருங்களிறு தொலைத்த முடத்தாள் ஓமை
 அருஞ்சுரம் செல்வோர்க்கு அல்குநிழல் ஆகும்”
—நற். 137: 5-8

“புல்இலை ஓமைய புலிவழங்கு அத்தம்”—நற். 107: 6

“பொருத யானை புல்தாள் ஏய்ப்ப
 பசிப்பிடி உதைத்த ஓமைச் செவ்வரை”
—நற். 279: 6-7

“உலவை ஓமை ஓங்குநிலை ஒடுங்கி
 சிள் வீடு கறங்கும் சேய்நாட்டு அத்தம்”
—நற். 252: 1-2

இனிப் ‘பாங்கர்’ என்ற பெயரில் ஒரு கொடியும் இருந்தது போலும்.