2
சங்க இலக்கியத்
“உவர் எழுகளரி ஓமை அம்காட்டு
வெயில் வீற்றிருந்த வெம்பு அலை அருஞ்சுரம்”—நற். 84:8-9
“உமணர் சேர்ந்து கழிந்த மருங்கின் அகன்றலை
ஊர்பாழ்த்தன்ன ஓமை அம்பெருங்காடு”—குறுந். 124:1-2
“புன்தாள் ஓமைய சுரன் இறந்தோரே”—குறுந். 260: 7-8
“கானயானை தோல் நயந்து உண்ட
பொரிதாள் ஓமை வளிபொரு நெடுஞ்சினை
அலங்கல் உலவை ஏறி”—குறுந். 79: 2-4
“.... .... .... .... .... .... .... .... .... .... .... ஐயநாம்
பணைத்தாள் ஓமைப்படு சினை பயந்த
பொருந்தாப் புகர் நிழல் இருந்தனமாக”—நற். 318: 1-3
“உலறுதலைப் பருந்தின் உளிவாய்ப் பேடை
அலறுதலை ஓமை அம்கவட்டு ஏறி
புலம்பு கொள விளிக்கும் நிலம் காய் கானத்து”—குறுந். 321: 1-3
“சேயின் வரூஉம் மதவலி யாஉயர்ந்து
ஓமை நீடிய கானிடை அத்தம்”—நற். 198: 1-2
“அத்தஓமை அம்கவட்டு இருந்த
இனம் தீர்பருந்தின் புலம்புகொள் தெள்விளி
சுரம் செல்மாக்கட்கு உயவுத்துணை ஆகும்”—குறுந். 207: 2-3
“.... .... .... .... .... .... .... .... .... முளி சினை
ஓமைக்குத்திய உயர்கோட்டு ஒருத்தல்”—குறுந். 396: 3-4
“பெருங்களிறு தொலைத்த முடத்தாள் ஓமை
அருஞ்சுரம் செல்வோர்க்கு அல்குநிழல் ஆகும்”—நற். 137: 5-8
“புல்இலை ஓமைய புலிவழங்கு அத்தம்”—நற். 107: 6
“பொருத யானை புல்தாள் ஏய்ப்ப
பசிப்பிடி உதைத்த ஓமைச் செவ்வரை”—நற். 279: 6-7
“உலவை ஓமை ஓங்குநிலை ஒடுங்கி
சிள் வீடு கறங்கும் சேய்நாட்டு அத்தம்”—நற். 252: 1-2
இனிப் ‘பாங்கர்’ என்ற பெயரில் ஒரு கொடியும் இருந்தது போலும்.