பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

உழிஞை
கார்டியோஸ்பர்மம் ஹெலிகாகேபம்
Cardiospermum halicacabum,Linn.)

அரணை முற்றுகையிடும் அறிகுறியாக உழிஞைப்பூவைச் சூடிக் கொள்வராதலின், இது ஒரு போர் மலர்.

‘உழிஞை’ என்பது எங்கும் வேலிகளில் ஏறிப் படரும் நீண்ட கொடி. இதனை முடக்கத்தான் (முடக்கற்றான்) என வழங்குவர்.

சங்க இலக்கியப் பெயர் : உழிஞை
தாவரப் பெயர் : கார்டியோஸ்பர்மம் ஹெலிகாகேபம்
(Cardiospermum halicacabum,Linn.)

இக்கொடியை முடக்கறுத்தான் என்று அழைப்பர். முடக்கு வாதத்திற்கும் மருந்தாகப் பயன்படுத்துவர்.

உழிஞை இலக்கியம்

உழிஞைப்பூவால் பெயர் பெற்றது உழிஞைத் திணை. அரணை முற்றுகையிடும் அறிகுறியாக இதன் பூவைச் சூடுவர். ‘உழிஞை’ என்பது ஒரு கொடி என்பதை ‘நுண்கொடி உழிஞை’ (பதிற். ப: 44:10) எனவும், ‘நெடுங்கொடி உழிஞை’ (புறநா 76:5) எனவும் புலவர்கள் கூறுவர். இக்கொடியும், தளிரும், மலரும் பொன் போன்ற இள மஞ்சள் நிறமானவை என்று கூறுப.

“பொலங்கொடி உழிஞையன்-பதிற். ப. 56:5
“பொலங்குழை உழிஞையொடு பொலியச் சூட்டி
-புறநா 50:4


மலையாளத்தில் இதனைக் ‘கொற்றான’ என வழங்குவர். கொற்றான் என்பது ‘கருங்கொற்றான்’ ‘நூழிற்கொற்றான்’, ‘முடக்கொற்றான்’ எனப் பல வகைப்படும். உழிஞை உலக வழக்கில்