பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

226

மஞ்சரி : இலைக் கோணத்திலும் கிளை, நுனியிலும் நுனி வளரும் பூந்துணர்.
மலர் : மலரடிச் செதிலும், சிறு செதில்களும் உள. மலர் பெரியது. நெருப்பை ஒத்த செந்நிறமானது. அழகானது. இருபாலானது. குடும்பப் பெயருக்கேற்றது.
புல்லி வட்டம் : 5 புறவிதழ்கள் இணைந்த அகன்ற குவளை வடிவானது. கரும் பச்சை நிறமானது. அரும்பில் அகவிதழ்களை மூடியிருக்கும். மேற்புற இரு புல்லியிதழ்கள் சற்று நீளமானவை. கூம்பு போன்றது. அடிப்புறப் புல்லியிதழ் மிகச் சிறியது.
அல்லி வட்டம் : பதாகை இதழ் அகன்ற நீளமான கூரிய கத்தி போன்றது. சிறகிதழ்கள் இரண்டும் பக்கவாட்டில் இருக்கும்; இணைந்த அடியிதழ்களை ஒட்டியிருக்கும்.
மகரந்த வட்டம் : இரு தொகுதியானவை (9 + 1) மகரந்தப் பைகள் ஒரே மாதிரியானவை.
சூலக வட்டம் : ஒரு சூலக ஓரறைச் சூல். சூல் தண்டு நீளமானது. உள் வளைவானது. சூல் முடி மிகச் சிறியது.
கனி : ஒரு புற வெடிகனி. 3-4 செ.மீ. நீளம் அடியில் பட்டையானது. மேலே சிறகு போன்றது. நுனியில் வட்டமான துளை வழியாக ஒரு விதை வெளிப்படும்.
விதை : சற்று அமுங்கிய முட்டை வடிவானது.