பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாவரங்கள்

245

தாவரச் சிற்றினப் பெயர் : மார்சூப்பியம் (marsupium)
சங்க இலக்கியப் பெயர் : வேங்கை
பிற்கால இலக்கியப் பெயர் : திமிசு, திமில், கணி
உலக வழக்குப் பெயர் : வேங்கை
தாவர இயல்பு : ஓங்கித் தழைத்து வளரும் வலிய மரம். இலையுதிர் காடுகளில் வளரும்.
இலை : கூட்டிலை; 5-7 சிற்றிலைகள். அகன்றவை; தடித்தவை. நடுவில் அகன்றும், இது மேலும், கீழும் குறுகியுமிருக்கும்.
மஞ்சரி : நுனி வளராப் பூந்துணர். கலப்பு மஞ்சரி போன்று .தோன்றும். இலைக் கோணத்தில் வளரும்.
மலர் : மஞ்சள் நிறமானது.
புல்லி வட்டம் : வளைந்த புனல் வடிவானது. 2-4-2 புறவிதழ்கள் மேலுங் கீழுமாக அமைந்திருக்கும்.
அல்லி வட்டம் : நீண்ட 5 தனித்த அகவிதழ்கள். பதாகை இதழ் அகன்று பளபளப்பாகவும், மஞ்சள் நிறமாகவும் காணப்படும் நீள் சதுரப் பிளவுபட்டிருக்கும்.
மகரந்த வட்டம் : 10 தாதிழைகள்; இரு தொகுதியாக இருக்கும். தாதுப் பைகள் ஒரே மாதிரி மாதிரியானவை.
சூலக வட்டம் : ஒரு செல் உடையது. சூல்தண்டு உள் வளைவானது; சூல்முடி குல்லாப் போன்றது. 2-6 சூல்கள்.
கனி : உலர் கனி. பாட் (Pod) எனப்படும். தட்டையானது. இரு பக்கத்திலும் சிறகு போன்ற அமைப்பானது. ஒரு விதையே உள்ளது.