பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/27

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



11

மலர் மிகப்பெரியது. ஏறக்குறைய (4" - 5") அதாவது 10-12 செ. மீ. நீளமானது. 8-10 செ. மீ. அகலமானது. வெண்ணிறமும் நறுமணமும் உடையது. இதில் இளஞ்சிவப்பு நிறமான மலருடைய சிறுமரமும் உதகையில் வளர்க்கப்படுகின்றது. புறவிதழ்கள் மூன்றும், பசிய வெண்மையான அகன்ற மடல்களாக விரியும். அகவிதழ்கள் 2-4 அடுக்காகவும், ஒவ்வொரு அடுக்கிலும் 6 முதல் 12 அகவிதழ்களும் உள்ளன. பல தட்டையான மலட்டு மகரந்தத் தாள்கள் இதழொட்டி இருக்கும். இதன் ஒருபுற வெடிகனி, ஓரிரு விதைகளை உடையது.

இதனையும் சண்பகமென்றே அழைக்கின்றனர். இது ஓர் அழகிய சிறு மரம். மிகத் தண்ணியவிடங்களில் மட்டும் வளர்க்கப்படுகின்றது. மலர் மிகப் பெரியது. சிறந்த நறுமணம் உடையது. பல நாள்களுக்கு இதன் மணம் வெகு தொலைவிலும் நுகரப்படும். இவ்வியல்புகளை உற்று நோக்கினால் இதனையே ‘பெருந்தண் சண்பகம்’ என்று கூறலாம் போலத் தோன்றுகிறது. நக்கீரர். கபிலர். நல்லந்துவனார் ஆகிய மூன்று புலவர் பெருமக்களும் சண்பக மலரைத்தான், ‘பெருந்தண் சண்பகம்’ என்று கூறியுள்ளனரா என்பது சிந்திக்கற்பாற்று. ஆனால், செந்தமிழ் நாட்டில் இவ்விருமலர் மரங்களும் வளர்கின்றன. கபிலர், குறிஞ்சிப் பாட்டில் ‘பெருந்தண் சண்பகம்’ என்றார். இவர் சண்பகத்தை தனித்துரைத்தார் அல்லர். சண்பக மலர் மஞ்சள் நிறமானது. பெருந்தண் சண்பகம் வெண்மை நிறமானது. சண்பகத்தில் 6-9 இதழ்களே உள்ளன. பெருந்தண் சண்பகத்தில் 2 முதல் 4 அடுக்கும் ஒவ்வொரு அடுக்கிலும் ஆறு இதழ்களும் காணப்படுகின்றன. மலரும் மிகப் பெரியது. மிகத் தண்ணியவிடங்களில் மட்டும் வளர்கிறது.

இது மக்னோலியேசி என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. சண்பகம் என்றே வழங்கப்படுகிறது.


பெருங்தண் சண்பகம் தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : தாலமிபுளோரே