பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/270

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

254

சங்க இலக்கியத்

செந்நிற அழகாலும் ஈர்க்கப்பட்ட வண்டினம் பிற மகரந்தச் சேர்க்கைக்குத் துணை செய்யும் என்பர்.

இத்துணைச் சிறப்பிற்றாகிய அசோக மரத்தைச் சராக்கா இன்டிகா (Saraca indica, L.) என்பர் தாவர நூலில். இந்திய நாட்டில் பெரிதும் காணப்படும் சிறப்புப் பற்றியே இதன் சிற்றினப் பெயர் இன்டிகா (indica) எனப்பட்டது. இது புளி, கொன்றை, ஆவாரை முதலியவற்றைக் கொண்ட சிசால்பினாய்டியே (Caesalpinoideae) என்ற தாவரத் துணைக் குடும்பத்தைச் சார்ந்தது. சராக்கா (Saraca) என்ற இப்பேரினம், ஆறு சிறு இனங்களை உடையதாய், இந்திய நாட்டில் நடுவிலிருந்து கிழக்கு இமயம் முதலாகத் தென் தமிழ் நாடு வரையிலும், ஜாவா, சுமத்திரா முதலிய கிழக்கிந்தியத் தீவுகளிலும், சீலங்கா, மலேயா, பர்மா முதலிய நாடுகளிலும் செழித்து வளர்கிறதென்பர். தமிழ் நாட்டில் சராக்கா என்ற பேரினத்தில் ஒரு சிற்றினமான இன்டிகா எனப்படும் ‘பிண்டி’ மட்டும் வளர்கின்றதென்பர் ‘காம்பிள்’.

இதன் குரோமோசோம் எண்ணிக்கை: 2n=24 எனக் கண்டு அட்கின்சன் (1951) கூறுவர். இம்மரம் 2000 அடி உயரமுள்ள மலைப்பாங்கில் கிளைத்து வளருமென்பர். இதன் அடி மரம் செவ்விய பழுப்பு நிறமானது. மலர் அழகுக்காக இம்மரம், தாவரத் தோட்டங்களில் வளர்க்கப்படுகின்றது.

பிண்டி–செயலை–அசோகு தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : காலிசிபுளோரே-அகவிதழ்கள் பிரிந்தவை.
தாவரக் குடும்பம் (துணைக்குடும்பம்) : சிசால்பினாய்டியே (Caesalpinoideae)
தாவரப் பேரினப் பெயர் : சராக்கா (Saraca)
தாவரச் சிற்றினப் பெயர் : இன்டிகா (indica)
ஆங்கிலப் பெயர் : அசோகா மரம் (Asoka Tree)