பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/272

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

256

விதை : அடி குறுகிய முட்டை வடிவானது. தட்டையாக அழுந்தியது. ஆல்புமின் இல்லாதது.

இம்மரம் செவ்விய தளிர் விட்ட போதும், மலர்ந்த போதும் மிக அழகாகவும், எடுப்பாகவும் காணப்படும். அடி மரம் சிவந்த பழுப்பு நிறமானது. மிருதுவான, மிக வலிய, என்றும் தழைத்துள்ள மரம். தென் கன்னடம், மைசூர், திருவாங்கூர் மலைப் பகுதிகளில் வளர்கிறது என்பர். இளவேனிற் காலத்தில் பூத்து, நல்ல நிழல் தரும். இம்மரங்களைக் கொண்ட அசோக வனத்தில், இம்மரத்தினடியில்தான் இராவணன் கவர்ந்து சென்ற இராமனது மனைவியாகிய சீதையைச் சிறை வைத்தான் என்று கூறும் இராம காதை.