பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாவரங்கள்

269

ஆர்—மந்தாரம் தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம். அல்லி விரிந்தது.
தாவரத் தொகுதி : காலிசிபுளோரேயில் ரோசேலீஸ் (Rosales)
தாவரக் குடும்பம் : சீசல் பினியே (Caesalpinieae)
தாவரப் பேரினப் பெயர் : பாகினியா (Bauhinia)
தாவரச் சிற்றினப் பெயர் : பர்பூரியா (purpurea)
தாவர இயல்பு : மீசோபைட்
இலை : மிக அகன்றது; இரு நீண்ட சிற்றிலைகளும் அடி ஒட்டி இருக்கும்.
மஞ்சரி : தனி மலர் அல்லது கலப்பு மஞ்சரியாகக் கிளை துனியில் உண்டாகும்.
மலர் : வெளிர் மஞ்சள் நிறமானது, நறுமணமுள்ள, சற்று நீளமானது. ஐந்தடுக்கானது..அகவிதழ்கள் ஒரே அளவுள்ளவை. இருபக்கச் சமச்சீரானது.
புல்லி வட்டம் : 5 சிறு விளிம்புகள் பசுமையானவை.
அல்லி வட்டம் : 5 நீளமான ஒரே மாதிரியானவை. மேல் இதழ் உட்புறமானது.
மகரந்த வட்டம் : பொதுவாக 10 இருக்கும். இவை அருகிப் போய் ஒன்று மட்டும் காணப்படும்.
சூலக வட்டம் : ஒரு சூலிலைச் சூலகம். பல சூல்கள்.
சூல் தண்டு : மெல்லியது: குறுகியது சூல்முடி.
கனி : வெடியாத உலர்கனி, பட்டையானது.
விதை : முட்டை வடிவானது. ஆல்புமின் உள்ளது.

இச்சிறு மரம் மலருக்காகக் கோயில்களிலும், அழகுக்காகப் பூந்தோட்டங்களிலும் வளர்க்கப்படுகிறது. இதனைத் திருவாத்தி என்றும், வெள்ளை மந்தாரை என்றும் கூறுவர்.