பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/364

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

348

சங்க இலக்கியத்


“கொடியை வாழி தும்பி இந்நோய்
 நுண்முள் வேலித் தாதொடு பொதுளிய
 தாதுபடு பீரம் ஊதி வேறுபட
 நாற்ற மின்மையின் பசலை ஊதாய்”
-நற். 277 : 1-6-8

‘கொங்குதேர் வாழ்க்கைத் தும்பியை’ இங்ஙனம் ‘கொடியை’ என விளித்துப் பாடிய புலவரின் பெயர் தும்பிசேர் கீரனார்.

படப்பையில், வேலியில், புதரில், பீரம் படரலாம். ஆனால் இல்லின் மேல், மனையில், மன்றத்தில் படரக் கூடாது. மனையில் பீரம் முளைத்தால், அது பாழ்மனை என்று பொருள்.

“முனை கவர்ந்து கொண்டெனக் கலங்கிப்பீர்
 மனைபாழ் பட்ட மரைசேர் மன்றத்தில்”

-அகநா. 373 : 1-2


என்று ஏனாதி நெடுங்கண்ணனாரும்.

“பஞ்சி முன்றில் சிற்றில் ஆங்கண்
 பீரை நாறிய சுரைஇவர் மருங்கின்”
-புறநா. 116 : 5-6

என்று கபிலரும்,

“கொடுவில் ஆடவர் படுபகை வெரீஇ
 ஊர்எழுந்து உலறியபீர் எழுமுது பாழ்”
-அகநா. 167 : 10

எனக் கடியலூர் உருத்திரங்கண்ணனாரும், இவ்விளைவைப் பாடியுள்ளனர்.

இதன் காய் உணவுக்கு உதவும். இதன் முற்றிய கனி உடம்பு தேய்த்துக் குளிக்கப் பயன்படும். இதனைப் பிளெஷ்பிரஷ் (Flesh brush) என்பர்.

பீரம்—பீர்க்கு தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : காலிசிபுளோரே; பாசிபுளோரேலீஸ்;

அகவிதழ் இணையாதது என்பர் . எனினும், இதன் குடும்பத்தில் அகவிதழ்கள் இணைந்திருக்கும்.

தாவரக் குடும்பம் : குக்கர்பிட்டேசி(Cucurbitaceae)
தாவரப் பேரினப் பெயர் : லஃபா (Luffa)