பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/367

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

வானி–ஓமம்
கேரம் காப்டிகம் (Carum copticum,Benth.)

வானி-ஓமம் இலக்கியம்

‘பயினி வானி பல்லிணர்க் குரவம்’ என்றார் கபிலர் (குறிஞ். 68). நச்சினார்க்கினியர் ‘வானி’ என்பதற்கு ‘வானிப்பூ’ என்று உரை கூறினார். வடமொழியில் ஒருவகையான ஓமத்தை, ‘பாசிகாயவானி’ என்பர். அகரமுதலிகள் ‘ஓமம் என்னும் பூண்டு’ என்பதைக் கொண்டால் வானிப்பூவை ஓமம் என்று கொள்ளலாம். இதன் பூ வெண்மையானது. இதன் கனி ஓமம் எனப்படும். இதிலிருந்து ஓம நீர் வடித்தெடுக்கப்படுகிறது. உணவைச் சீரணிக்கச் செய்யும் ஆற்றல் ஓமத்திற்கு உண்டு.

சங்க இலக்கியத்தில் வானி என்ற சொல் வேறு யாண்டும் காணப்படவில்லை.

வானி–ஓமம் தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : காலிசிபுளோரே (Calyciflorae)
அம்பலேலீஸ் (umbellales)
அகவிதழ்கள் இணையாதது
தாவரக் குடும்பம் : அம்பெலிபெரே (Umbelliferae)
தாவரப் பேரினப் பெயர் : கேரம் (Carum)
தாவரச்சிற்றினப்பெயர் : காப்டிகம் ( copticum, Benth)
சங்க இலக்கியப் பெயர் : வானி
உலக வழக்குப் பெயர் : ஓமம்