பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/369

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

“சே”–அழிஞ்சில்
அலாஞ்சியம் சால்விபோலியம்
(Alangium salvifolium, Wang.)

தொல்காப்பியத்தில் ‘சே’ என்னும் பெயர் பெற்றது இம்மரம். சிலப்பதிகாரமும், பிங்கலமும் இதனை ‘அழிஞ்சில்’ என்று குறிப்பிடுகின்றன. மற்று. இதனைச் சங்க இலக்கியங்களில் காண முடியவில்லை. எனினும், இது உயரமாக வளரும் ஒரு வலிய மரம்.

தொல்காப்பியப் பெயர் : ‘சே’
பிற்கால இலக்கியப் பெயர் : அழிஞ்சில்
தாவரப் பெயர் : அலாஞ்சியம் சால்விபோலியம்
(Alangium salvifolium, Wang.)

“சே”–அழிஞ்சில் இலக்கியம்

‘சே’ என்ற இம்மரம் தொல்காப்பியத்தில் இலக்கணம் பெற்றுள்ளது: ‘சே என மரப்பெயர் ஒடுமர இயற்றே’ (தொல். 1:7:76). ‘சேம்பூ’ என்ற விதி பெற்றது. ‘அழிஞ்சில், சேமரம் அங்கோலமாகும்’ என்ற வண்ணம் இது ‘அழிஞ்சில்’ எனப் பெயர் பெற்றது எனக் கூறும் பிங்கலம் [1]. சிலம்பில் [2] ‘சே’ எனறதற்கு அரும்பத உரையாசிரியர் ‘உழிஞ்சிலுமாம், அழிஞ்சிலுமாம்’ என்றனர் ஆயினும் இதற்கு, ‘அழிஞ்சில்’ என்ற பெயர் பொருந்துமென்றனர். இம்மரம் நிறைந்த காடு அழிஞ்சிக்காடு எனப்படும். பாலைக்காடு என்பர் இளஞ்சேரனார். இதன் மலர் மஞ்சள் கலந்த வெண்ணிறம் உடையது.


  1. பி. நிகண்டு: 2730
  2. சிலப். 2 : 12 : 2
 

73-23