பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/398

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

382

சங்க இலக்கியத்

“கரந்தைஅம் செறுவின் பெயர்க்கும்”-புறநா. 340 : 8

“கரந்தைஅம் செறுவின் வெண்குருகு ஒப்பும்”
-அகநா. 226 : 6


இதன் மலர்கள் சிறு முட்டை வடிவினவாகவும், செம்மை, நீலம், இளஞ்சிவப்பு, நீலம் கலந்த சிவப்பு நிறங்களை உடையனவாகவும் இருக்கும்.

சிறிய பால்மடிக் காம்பு போன்ற இதன் இணர்மலரில் நறுமணம் உடையதாக இருக்கும். இளஞ்சிவப்பு நிறமுடைய கரந்தையைச் ‘சிவகரந்தை’ என்பர். இதில் நறுமணம் மிகுத்து உண்டாகும். நச்சினார்க்கினியர், ‘நாறுகரந்தை’ என்றது இதுவே போலும். இதனைக் கொண்டு சிவனைப் பரவுதலைப் பட்டினத்தடிகள் கூறுவர். [1]

இதனைக் கண்ட திருமாலியத்தார் நீலங்கலந்த கரந்தையைத் திருமாலுக்குரியதாக்கி ‘விட்டுணுக் கரந்தை’ என்பர். ஏனைய கரந்தையைக் ‘கொட்டைக்கரந்தை’ என்பர்.

இக்கரந்தையில் மலரெனக் கூறப்படுவது தனி மலரன்று. இதனைக் கரந்தையிணர் என்பது பொருந்தும். சற்று நீண்ட சிறு முட்டை வடிவான கரந்தையின் இவ்விணரில் நூற்றுக்கணக்கான மலர்கள் இணைந்து கொட்டை போல இருக்கும்.

கரந்தை தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : இன்பெரே (Inferae)
ஆஸ்ட்ரேலீஸ் (Asterales)
அல்லியிணைந்தவை.
தாவரக் குடும்பம் : கம்பாசிட்டே (Compositae)
தாவரப் பேரினப் பெயர் : ஸ்பெராந்தஸ் (Sphaeranthus)
தாவரச் சிற்றினப் பெயர் : இன்டிகஸ் (indicus)
சங்க இலக்கியப் பெயர் : கரந்தை
 

  1. ‘நொச்சியாயினும் கரந்தையாயினும்
    பச்சிலையிட்டுப் பரவுதல் தொண்டர்’ -பதினோராந்திருமுறை