பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/399

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாவரங்கள்

383

தாவர இயல்பு : ஒன்று முதல் ஒன்றரை அடி உயரம் வரை வளரும். ஓராண்டுச் செடி. செடி முழுவதும் ஒரு விதப் பசைப் பொருளைச் சுரக்கும் சுரப்பிகளைக் கொண்ட நுண்மயிர் அடர்ந்திருக்கும்.
இலை : சிறிய, பசிய, நீண்ட தனி இலை. மாற்றடுக்கில் தண்டில் அமைந்திருக்கும.
மஞ்சரி : சற்று நீண்ட முட்டை அல்லது உருண்டை வடிவான மஞ்சரி. இதனை மஞ்சரித் தொகுப்பு என்று கூற வேண்டும். இதற்கு (compound head) என்று பெயர். “.5 - .6” அங்குல அகலமுள்ள இம்மஞ்சரித் தொகுப்பு கிளை நுனியில் உண்டாகும். ஒவ்வொரு மஞ்சரியிலும் பல மலர்கள் அடர்ந்திருக்கும். இம்மஞ்சரித் தொகுப்பில், புறத்தில் பெண் பூக்களும், உட்புறத்தில் இருபாலான பூக்களும் இருக்கும். இவற்றிற்கிடையே செதில்களும் உள்ளன. பல மஞ்சரித் தொகுப்பான, இதன் நடுத்தண்டு சற்றுச் சதைப்பற்றானது. இதனைச் சுற்றியே அடுக்கடுக்காகப் பல மஞ்சரிகள் நிறைந்திருக்கும்.
பெண் மலர் : இதில் அல்லிவட்டம் குழல் வடிவானது; 2-3 நுண்ணிய விளிம்புகளை உடையது.
இருபால் மலர் : இதில் அல்லிவட்டம் புனல் வடிவமானது. புனலின் அடிக்குழல் சற்றுத் தடித்தது. மேல்மடல் 4-5 பிளவானது.
மகரந்த வட்டம் : மகரந்தப்பை அடியில் முக்கோண வடிவானது.
சூலக வட்டம் : ஒரு செல் உள்ளது. இதில் ‘அகீன்’ என்ற கனி உண்டாகும். இதுவே விதையுமாகும்.