பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/407

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

391

இதனை ‘மாலையாகக் கட்டி மகளிர் சூடிக் கொள்வர்‘ என்று மட்டும் அறிய முடிகிறதன்றி, வேறு எக்குறிப்பும் காணப்படவில்லை.

எனினும், இது செங்கொடி வேலி என்றிருக்குமாயின், இக்காலத்தில் வழங்கப்படும் செந்நிற மலருள்ள ‘கொடி வேலி’ மலரைக் குறிக்கும். கொடி வேலியில் வெண்ணிற மலருள்ள செடியும் உண்டு. நீல நிறமுள்ள மலருள்ள செடியும் உண்டு. சென்னை-கலைக்களஞ்சியம் இதனைச் செங்கொடி வேரி என்றே குறிப்பிடுகின்றது (Vol. III பக்கம் 1581). மேலும், இதனைப் பிளம்பாகோ ரோசியா (Plumbago rosea) ‘ரோஜா நிறப்பூ உள்ள கொடி வகை’ என்று கூறும். இது கொடியன்று; மரமன்று; செடிதான். வெற்றிடத்தும், வேலிகளிலும் தானே வளரும் செடியாகும். இது பிளம்பாஜினேசி (Plumbaginaceae) என்ற தாவரக் குடும்பத்தின் பாற்படும்.

இச்செடி மருந்துக்குப் பயன்படும்.

செங்கொடுவேரி தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : எரிகேலீஸ், அகவிதழ் இணைந்தவை
தாவரக் குடும்பம் : பிளம்பாஜினேசி (Plumbaginaceae)
தாவரப் பேரினப் பெயர் : பிளம்பாகோ (Plumbago)
தாவரச் சிற்றினப் பெயர் : ரோசியா (rosea)
தாவர இயல்பு : செடி
தாவர வளரியல்பு : மீசோபைட், சற்று வறண்ட வெற்றிடத்தும், வேலிகளிலும் வளர்கிறது. 2 முதல் 4 அடி வரையில் வளரும்.
இலை : சற்று அகன்ற தனியிலை, மாற்று அடுக்கில் இருக்கும். மெல்லியது. முட்டை வடிவானது. இலைக்காம்பின் அடி அகன்றிருக்கும்.