பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/411

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

395

திணைமாலை நூற்றைம்பதிலும் ஒவ்வோரிடத்தில் மட்டும் வகுளம் குறிப்பிடப்பட்டுள்ளது.

“குல்லை வகுளம் குருக்கத்தி பாதிரி ”-பரி. 12 : 79

“நறுந்தண் தகரம் வகுளம் இவற்றை ”[1]

சேந்தன் திவாகரம் [2] ‘வகுளம் இலஞ்சி மகிழ் மரமென்று’ என்று வகுளத்திற்கு, இலஞ்சி, மகிழ் என்ற இரு பெயர்களைச் சூட்டுகிறது. தாவர இயலில் இதற்கு மிமுசாப்ஸ் இலெஞ்சி என்று பெயர். இதில் தாவரச் சிற்றினப் பெயராகிய ‘இலெஞ்சி’ என்பது திவாகரம் கூறும் இலஞ்சியாகத்தான் இருக்க வேண்டும்.

தினை விதைப்பதற்கு வெறும் புதரை வெட்டுவது போன்று, வகுளத்தை வெட்டி எறிவதைக் கணிமேதாவியார் கூறுதலின் இது குறிஞ்சி நிலப்பூ என்பதறியலாம்.

மகிழ மரம், மிக அழகிய சிறுமரம். என்றும் பசுமையானது. இதன் பூ மிகச் சிறியது. அழகிய அமைப்புடையது. மங்கிய மஞ்சள் நிறமானது. இனிய நறுமணமுடையது. இம்மலரின் வடிவமைப்பைத் திருத்தக்கதேவர் தேர்க்காலின் வடிவமைப்பிற்கு ஒப்பிட்டுள்ளார்.

கம்பர், இராமனது கொப்பூழ்க்கு இப்பூவை உவமையாக்கினார். இராமனது ஒவத்து எழுத ஒண்ணாத உருவத்தைச் சொல்லின் செல்வன் சொற்களாற் காட்டுகின்றார்[3]. கவி மரபில் வகுளம் மகளிர் எச்சில் உமிழ மலரும் என்பர்.


  1. திணை மாலை நூற். 24
  2. ‘கோடு உதையாக் குழிசியோடு ஆரங் கொளக்

     குயிற்றிய ஓடு தேர்க்கால் மலர்ந்தன வகுளம்’ 1650

    (தேருருளை; மேற்சூட்டு வையாத் தேருருளை) மகிழ், தேர் உருளைப் போலே பூத்தன என்று உரை கூறியுள்ளார். இம்மலர் பூக்காம்பினின்றும் கழன்று விழும். இக்காட்சியைத் திருத்தக்க தேவர், ‘ஒரு சிலந்திப் பூச்சி கீழ் விழுவது போன்ற’தென்பார்.

    “மதுக்கலந் தூழ்த்துச் சிலம்பி வீழ்வனபோல்
    மலர் சொரி வகுளமும் மயங்க” 2108

  3.  . . . . . . . . . . . . பூவொடு
    நிலஞ்சுழித் தெழுமணி உந்தி நேர்இனி
    இலஞ்சியம் போலும் வேறுவமை யாண்டயோ

    -கம்ப இராமாயணம்