இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தாவரங்கள்
405
போரில் வெற்றியைக் குறிப்பது வாகைத் திணை. இதன் உட்பிரிவான துறைகள் பல. அவற்றுள் முல்லையால் பெயர் பெற்ற 12 துறைகள் குறிப்பிடப்படுகின்றன. வாகைத் திணையின் வெற்றியை, உறழ்ச்சியால் பெற்ற வாகை எனவும், இயல்பால் பெற்ற வாகை எனவும் இருவகையாகப் பேசுவர்.
இயல்பால் வெற்றி பெற்ற வாகைத் திணையில் முல்லைப் பெயர் பெற்ற துறைகள் பன்னிரண்டாவன:
1. | அரச முல்லை | — | அரசனது வெற்றி மேம்பாடு கூறுவது. |
2. | பார்ப்பன முல்லை | — | பார்ப்பனரது நடுவு நிலைச் சிறப்பைக் கூறுவது. |
3. | கணியன் முல்லை | — | கணித்துக் கூறும் சோதிடன் புகழ் கூறுவது. |
4. | மூதின் முல்லை | — | பழங்குடி வீரத்தாயின் மன வலிமை. |
5. | அவைய முல்லை | — | அவையோர் நடுவு நிலைப் பெருமையைக் குறிப்பது. |
6. | ஏறாண் முல்லை | — | ஏறு போன்றவனால் பெற்ற குடிப் பெருமை கூறுவது. |
7. | வல்லாண் முல்லை | — | ஊர், குடி கூறி வீரனது நல்லாண்மை குறிப்பது. |
8. | காவல் முல்லை | — | அரசனது காவற் சிறப்பைக் குறிப்பது. |
9. | பேராண் முல்லை | — | அரசன் போர்க்களத்தில் காட்டிய பேராண்மையைக் குறிப்பது. |
10. | மற முல்லை | — | படைவீரனது போர்த்துடிப்பைக் கூறுவது. |
11. | குடை முல்லை | — | மன்னனது கொற்றக்குடையின் சிறப்புக கூறுவது. |
12. | சால்பு முல்லை | — | அறிவிற் சிறந்த சான்றோரது சிறப்புப் பற்றியது. |
அன்றியும் பருவக் காலத்தைக் குறிக்கும் முல்லையைக் கார் முல்லை என்பர்.