பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/447

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

431

ஆசிரியர் தொல்காப்பியர், ‘யாமரக் கிளவியும் பிடாவும் தளாவும்’ -தொல். எழுத்து. (280 : 7 : 27) என்று இதனைத் ‘தளா’ என்று குறிப்பிடுகின்றார். தளவம் பிடவத்துடன் இணைத்துப் பேசப்படுகின்றது.

இந்நாளில் பிச்சிப் பூங்கொடி என வழங்கும் இத்தளவத்தில் இரு வகை உண்டு. ஒரு வகையில் செம்முல்லை மலர்கள் உண்டாகின்றன. மற்றொரு வகைக் கொடியில் வெண்ணிற மலர்கள் உண்டாகின்றன. ஏனைய இயல்புகள் எல்லாம் இரு வகைக் கொடிகளிலும் ஒரே மாதிரியானவை. இவற்றுள் முன்னையது தளவம் போலும், பின்னையது பித்திகம் போலும் எனக் கொள்ளுதல் கூடும். இதன் விரிவைப் ‘பித்திகம்’ என்ற தலைப்பிலும் கூறுதும்.

தளவம்—செம்முல்லை தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : பைகார்ப்பெல்லேட்டே
தாவரக் குடும்பம் : ஓலியேசி (Оleaceae)
தாவரப் பேரினப் பெயர் : ஜாஸ்மினம் (Jasminum)
தாவரச் சிற்றினப் பெயர் : கிராண்டிஃபுளோரம் (grandiflorum)
ஆங்கிலப் பெயர் : ஜாஸ்மின் (Jasmin)
தாவர இயல்பு : பல்லாண்டு வாழும் புதர்க் கொடி
தாவர வளரியல்பு : மீசோபைட்
உயரம் அல்லது நீளம் : 30 முதல் 50 மீட்டர் நீளம் ஏறிப் படர்ந்து வளரும் படர் கொடி.
கிளைத்தல் : இலைக் கோணத்தின் குருத்து, கிளைத்து நீண்டு வளரும்.
வேர்த் தொகுதி : வலிய ஆணி வேர், பக்க வேர்களும் உள.
தண்டுத் தொகுதி : மெல்லிய கம்பி போன்றது. வன் தண்டின் அமைப்புடையது.