பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/449

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

433

மேலே கூறியாங்கு, பிச்சிப் பூங்கொடி என வழங்கும் தளவம் அல்லது பித்திகத்தில் செவ்விய அரும்புகளையுடைய கொடியைத் தளவம் என்றும், வெண்மையான அரும்புகளையுடைய கொடியைப் பித்திகம் என்றும் கொள்ளுதல் கூடும். தாவரவியல் இவ்விரு கொடிகளையும் ஒரே சிற்றினமாகவே கருதி, ஜாஸ்மினம் கிராண்டிஃபுளோரம் என்று பெயரிடுகின்றது. இவற்றை இதுகாறும், யாரும் வேறுபடுத்தி ஆய்வு செய்யவில்லை என்று தெரிகிறது.

இதனுடைய குரோமோசோம் எண்ணிக்கை 2n = 26 என்று பவ்டன் (1940 a), கிருஷ்ணசாமி இராமன் (1948 а), டட்டா. எம் (1960) என்போர் கணக்கிட்டனர். மேலும்,

முல்லைக்கு 2n = 26 எனவும்,

செம்மலுக்கு 2n = 26 எனவும்,

கொகுடிக்கு 2n = 26, 39 எனவும்,

மல்லிகைக்கு 2n = 26, 39 எனவும்,

அதிரலுக்கு 2n = 26 எனவும்

பல்வேறு அறிஞர்கள் ஆய்ந்து கண்டுள்ளனர்.