பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/461

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

நள்ளிருள் நாறி–மயிலை–இருவாட்சி
(Jasminum Sambac florae-manoraepleno)

குறிஞ்சிப் பாட்டில் கூறப்படும் ‘நள்ளிருள்நாறி’ (குறிஞ். 94) என்பதற்கு நச்சினார்க்கினியர் ‘இருவாட்சிப்பூ’ என்று உரை கூறினார். ‘இருவாட்சி’க்கு மயிலை என்று பெயர்[1]. இதனைக் கொண்டு இருவாட்சியாகிய மயிலைக்குத் தாவரப் பெயரைக் காண முடிந்தது[2].

சங்க இலக்கியப் பெயர் : நள்ளிருள் நாறி
சங்க இலக்கியத்தில் வேறு பெயர் : மயிலை
பிற்கால இலக்கியப் பெயர் : இருவாட்சி, இருள்வாசி
உலக வழக்குப் பெயர் : இருவாட்சி
தாவரப் பெயர் : ஜாஸ்மினம் சம்பக்
(புளோரே-மானோரேபிளினோ)
(florae-manoraepleno)

நள்ளிருள் நாறி–மயிலை–இருவாட்சி இலக்கியம்

“நரந்தம் நாகம் நள்ளிருள் நாறி-குறிஞ். 94

என்றார் கபிலர். நள்ளிருள் நாறி என்பதற்கு நச்சினார்க்கினியர் ‘இருவாட்சிப்பூ’ என்று உரை கூறினார். ‘இருள்வாசி’ என்பது ‘இருவாட்சி’ என வழங்குகிறது என்பர் பத்துப் பாட்டுப் பதிப்பாசிரியர்.


  1. சூடாமணி நிகண்டு: மரப்பெயர்: 8
  2. இப்பெயரைக் கணிப்பதற்கு லஷிங்டன் எழுதிய நூல்-தமிழ் அட்டவணை பக். 34-துணை செய்தது.