இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நள்ளிருள் நாறி–மயிலை–இருவாட்சி
(Jasminum Sambac florae-manoraepleno)
குறிஞ்சிப் பாட்டில் கூறப்படும் ‘நள்ளிருள்நாறி’ (குறிஞ். 94) என்பதற்கு நச்சினார்க்கினியர் ‘இருவாட்சிப்பூ’ என்று உரை கூறினார். ‘இருவாட்சி’க்கு மயிலை என்று பெயர்[1]. இதனைக் கொண்டு இருவாட்சியாகிய மயிலைக்குத் தாவரப் பெயரைக் காண முடிந்தது[2].
சங்க இலக்கியப் பெயர் | : | நள்ளிருள் நாறி |
சங்க இலக்கியத்தில் வேறு பெயர் | : | மயிலை |
பிற்கால இலக்கியப் பெயர் | : | இருவாட்சி, இருள்வாசி |
உலக வழக்குப் பெயர் | : | இருவாட்சி |
தாவரப் பெயர் | : | ஜாஸ்மினம் சம்பக் (புளோரே-மானோரேபிளினோ) (florae-manoraepleno) |
நள்ளிருள் நாறி–மயிலை–இருவாட்சி இலக்கியம்
“நரந்தம் நாகம் நள்ளிருள் நாறி”-குறிஞ். 94
என்றார் கபிலர். நள்ளிருள் நாறி என்பதற்கு நச்சினார்க்கினியர் ‘இருவாட்சிப்பூ’ என்று உரை கூறினார். ‘இருள்வாசி’ என்பது ‘இருவாட்சி’ என வழங்குகிறது என்பர் பத்துப் பாட்டுப் பதிப்பாசிரியர்.