பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/474

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

குளவி-மலைமல்லிகை
ஜாஸ்மினம் கிரிபித்தியை
(Jasminum griffithii,Clarke.)

‘குளவி’ என்னும் புதர்க்கொடி மல்லிகை வகையைச் சார்ந்தது. இதன் இலைகள் அகன்று பெரியனவாக இருக்கும். இதனை மலைமல்லிகை என்று வழங்குவர். இதனுடைய தாவரப் பெயர் ‘ஜாஸ்மினம் கிரிபித்தியை’ என்பதாம். ஜாஸ்மினம் என்ற இத்தாவரப் பேரினத்தில் மிகப் பெரிய தனி இலையை உடைய சிற்றினம் ‘கிரிபித்தியை’ என்ற ஒன்றுதான். இதன் தாவரச் சிற்றினப் பெயரைக் கண்டு கொள்வதற்குத் துணை செய்த பாடல் குறுந்தொகையுள் உள்ளது (100). ‘பரு இலைக் குளவியோடு’ என இப்பாட்டில் கபிலர் கூறிய துணையானே இதன் தாவரச் சிற்றினப் பெயரை அறுதியிட முடிந்தது.

சங்க இலக்கியப் பெயர் : குளவி
சங்க இலக்கியத்தில் இதன் வேறு பெயர்கள் : அதிரல், மௌவல்., மல்லிகை
பிற்கால இலக்கியப் பெயர் : மலைமல்லிகை, வன மல்லிகை,

காட்டு மல்விகை

உலக வழக்குப் பெயர் : மலை மல்லிகை. மலைப்பச்சை
ஆங்கிலப் பெயர் : ஜாஸ்மினம் (Jasminum)
தாவரப் பெயர் : ஜாஸ்மினம் கிரிபித்தியை
(Jasminum griffithii,Clarke.)

குளவி-மலைமல்லிகை இலக்கியம்

‘கரந்தை குளவி கடிகமழ் கலிமா’ என்ற குறிஞ்சிப்பாட்டு (76) அடியிலும், திருமுருகாற்றுப்படை (191) ‘குளவியொடு’