பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/479

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

463

“குருதிச் செங்களம் புலவுஅற வேங்கை
 உருகெழு நாற்றம் குளவியொடு விலங்கும்
 மாமலை நாடனொடு மறுஇன் றாகிய<”

-அகநா. 268 : 1-5


இனி, குளவியுடன் கூதாளம் இணைத்துப் பாடப்பட்டுள்ளது:

“கூதளம் கவினிய குளவி முன்றில்”-புறதா. 168 : 12
“. . . . . . . . . . . . குளவியொடு
 வெண் கூதாளந் தொடுத்த கண்ணி”
-திருமுரு. 192
“நாறிதழ்க் குளவியொடு கூதளங்குழைய”-புறநா. 380 : 7
“குல்லை குளவி கூதளங் குவளை”-நற். 376 : 5

இங்ஙனமாகக் குளவிக் கொடி பயிலப்பட்டுள்ள சங்க இலக்கியப் பாடல்களை உற்று நோக்கினால், இது பெரிதும் மலையிடத்து வளரும் கொடி என்பதையும், குறிஞ்சித் திணைப் பாக்களில் மிகுதியும் பேசப்படுவதையும் அறியக் கூடும். ஆதலின், இக்குளவியைக் காட்டு மல்லிகை என்பதைக் காட்டிலும் மலை மல்லிகை என்று கூறுவது பொருந்தும்.

குளவி—மலை மல்லிகை தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : பைகார்ப்பெல்லேட்டே
தாவரக் குடும்பம் : ஓலியேசி (Oleaceae)
தாவரப் பேரினப் பெயர் : ஜாஸ்மினம் (Jasminum)
தாவரச் சிற்றினப் பெயர் : கிரிபித்தியை (griffithii)
தாவர இயல்பு : சிறு புதர்.
தாவர வளரியல்பு : மீசோபைட்
உயரம் அல்லது நீளம் : 20-50 மீட்டர் நீளமாக வளரும் எறு கொடி.