இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
516
சங்க இலக்கியத்
“மனை மாமரம் வாள் வீரம்”-பரி. 11 : 19
என்புழி, பரிமேலழகர், ‘மனை மாமரம்’ இல்லம், ஆவது தேறு என்றனர். இது முல்லையுடன் கார் காலத்தில் பூக்கும். இதன் பூ காம்பிலிருந்து கழன்று உதிரும்.
“முல்லை இல்லமொடு மலர,
. . . . . . . . . . . . . . . .
கார் தொடங்கின்றே காலை காதலர்”-அகநா. 364:7-9
இதன் பூவை முல்லை நிலத்தவர் குல்லை, குளவி, கூதளம். குவளை முதலிய பூக்களுடன் கணணியாகத் தொடுத்து அணிவர்;
“குல்லை குளவி கூதளம குவளை
இல்லமொடு மிடைந்த ஈர்ந்தண் கண்ணியன்”
-நற். 376 : 5-6
எனினும், இப்பூ குறிஞ்சிப் பாட்டில் கூறப்படவில்லை.
இல்லம்—தேற்றாங் கொட்டை மரம் தாவர அறிவியல்
தாவர இயல் வகை | : | பூக்கும் இரு வித்திலைத் தாவரம் |
தாவரத் தொகுதி | : | பைகார்ப்பெல்லேட்டே (Bicarpellatae) |
தாவரக் குடும்பம் | : | லொகானியேசி (Loganiaceae) |
தாவரப் பேரினப் பெயர் | : | ஸ்டிரிக்னஸ் (Strychnos) |
தாவரச் சிற்றினப் பெயர் | : | பொட்டடோரம் (potatorum) |
தாவர இயல்பு | : | மரம். 50 அடி வரையில் உயர்ந்து, கிளைத்து வளரும். ஏறக்குறைய 4000 அடி உயரமான மலைப்பகுதிகளிலும் காணப்படும். |
இலை | : | இரு முனையும் குறுகிய, நீண்ட சிற்றிலை. 6 அங் X 2.5 அங் இலை நரம்புகள் இணையிணையான நடு நரம்பிலிருந்து உண்டாகும். |