பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/536

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

520

சங்க இலக்கியத்

“. . . . . . . . . . . . அடும்பின்
 தார்மணி அன்ன ஒண்பூக் கொழுதி,
 ஒண்டொடி மகளிர் வண்டல் அயரும்”
-குறுந் 243 : 1-3

“ஆய்பூ அடும்பின் அலர்கொண்டு உதுக்காண்எம்
 கோதை புனைந்த வழி”
-கலி. 144 : 30-31

“இருங்கழி பொருத ஈரவெண் மணல்
 மாக்கொடி அடும்பின் மாஇதழ் அலரி
 கூந்தல் மகளிர் கோதைக் கூட்டும்”
-நற். 145 : 1-3

“அடும்பின் ஆய்மலர் விரைஇ நெய்தல்
 நெடுந்தொடை வேய்ந்த நீர்வார் கூந்தல்
 ஓரை மகளிர்”
--குறுந் 401 : 1-3

அடும்பு தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : பைகார்ப்பெல்லேட்டே பாலிமோனியேலீஸ் (Bicarpellatae Polymoniales)
தாவரக் குடும்பம் : கான்வால்வலேசி (Convolvulaceae)
தாவரப் பேரினப் பெயர் : ஐபோமியா (Ipomoea)
தாவரச் சிற்றினப் பெயர் : பெஸ்காப்ரே (pescaprae)
தாவர இயல்பு : படர் கொடி. சற்று வலிய கொடி.
தாவர வளரியல்பு : கடற்கரையில் வறண்ட மணல் மேட்டில் படர்ந்து மிக நீண்டு வளரும். சீரோமார்ப் (xeromorph) என்று கூறுவர்.
சங்க இலக்கியப் பெயர் : அடும்பு
பிற்கால இலக்கியப் பெயர் : அடும்பம், அடப்பம்
உலக வழக்குப் பெயர் : அடப்பங் கொடி, குதிரைக் குளம்பிலைக் கொடி குதிரைக் குளம்புக் கொடி.