இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
536
சங்க இலக்கியத்
இக்கொடி முஞ்ஞைக் கொடியுடன் நறுமணத்திற்காக வீட்டு முற்றத்தில் வளர்க்கப்பட்டு, பந்தல் போட்டது போலப் படரும். இதன் நீழலில் பலர் துயில் கொள்வர் என்று கூறுவர் விரைவெளியனார்.
“முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை. பம்பி
பந்தர்வேண்டாப் பலர் தூங்கு நீழல்”-புறநா. 320 : 1-2
முசுண்டை தாவர அறிவியல்
தாவர இயல் வகை | : | பூக்கும் இரு வித்திலைத் தாவரம் |
தாவரத் தொகுதி | : | பைகார்ப்பெல்லேட்டே |
தாவரக் குடும்பம் | : | கன்வால்வுலேசி (Convolvulaceae) |
தாவரப் பேரினப் பெயர் | : | ரைவியா (Rivea) |
தாவரச் சிற்றினப் பெயர் | : | ஆர்னேட்டா (ornata) |
சங்க இலக்கியப் பெயர் | : | முசுண்டை |
உலக வழக்குப் பெயர் | : | முசுட்டை |
தாவர இயல்பு | : | பெரிய கொடி. |
இலை | : | இதய வடிவான சிற்றிலை. இலையின் அடியில் பட்டுப் போன்று மெல்லிய மயிர் அடர்ந்திருக்கும். |
மலர் | : | நறுமணம் உள்ளது. இலைக்கோணத்தில் உண்டாகும். வெண்ணிறமானது. 1-3 மலர்களைக் கொண்ட மலர்த் தண்டாகவும் இருக்கும். |
புல்லி வட்டம் | : | 5 முட்டை வடிவான புறவிதழ்கள். |
அல்லி வட்டம் | : | 5 அகவிதழ்கள் இணைந்து, அடியில் குழல் வடிவாகவும், மேலே தாம்பாளம் போன்றும் இருக்கும். |