பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/56

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

நெய்தலையும் காவியையும் தனித்தனிப் பேசுவார் சேந்தன் கண்ணனார் (அகநா. 350) காவியின் மலர் மகளிர் கண்களுக்கு உவமிக்கப்படுகின்றது.

“வைகறைக்
கட்கமழ் நெய்தல் ஊதி எற்படக்
கண்போல் மலர்ந்த காமரு சுனைமலர்
அஞ்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும்”

-திருமுரு. 73-77

என்புழி நெய்தலாகிய கருங்குவளையே பேசப்படுகின்றது. ஆயினும் பிற்காலத்தில் கருங்குவளையை நீலமென்றும், காவி என்றும் கொண்டனர் போலும்.