பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/583

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாவரங்கள்

567

8 செ. மீ. நீளமானது. நீல நிறமுள்ளது. வெண்மையான மென்மயிர் அடர்ந்திருக்கும். இரு அகன்ற முட்டை வடிவான பூவடிச் செதில்கள் உடையது. மலர்கள் செதில் காம்பில் நேரே ஒட்டியுள்ளன.
புல்லி வட்டம் : 5 புல்லியிதழ்கள் பிரிந்தவை. மடல்கள் குறுகலானவை. 5 மி.மீ. நீளமானவை.
அல்லி வட்டம் : 5 அகவிதழ்கள் நீளமாகவும், சற்று ஊதா நிறமாகவும் இருக்கும். 1 செ.மீ அகலம். அடியில் இதழ்கள் இணைந்து, குழல் வடிவாய் இருக்கும். குழல் 2.5 செ.மீ. நீளமுள்ளது.
மகரந்த வட்டம் : 2 மகரந்தத் தாள்கள். மகரந்தத் தாள் 1 செ.மீ. நீளமானது. அல்லி ஒட்டியவை.
மகரந்தப் பைகள் : ஒவ்வொன்றிலும் இரண்டு. 2.5 மி.மீ. நீளமானவை.
சூலக வட்டம் : சூற்பை 2 சூலக அறைகளை உடையது. ஒவ்வொரு அறையிலும் 2 சூல்கள் காணப்படும்.
வட்டத்தட்டு : சிறியது.
சூல் தண்டு : மெல்லியது. 2 செ.மீ. நீளமுள்ளது.
கனி : காப்சூல் 1.2 - 4 செ.மீ.

குறிஞ்சி 12 ஆண்டுகட்கு ஒரு முறை பூத்ததென்பதை J.B.N. His Soc. 38 (1935) : 117-122, என்ற ஆய்வு இதழ் கூறுகின்றது. அதாவது, 1838ஆம் ஆண்டு தொடங்கி 1934ஆம் ஆண்டு வரையில் 9 முறை குறிஞ்சி பூத்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இம்மலர் பூக்கும் காலம் நவம்பர் முதல் டிசம்பர் முடிய என்பர்.