பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/616

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

600

மஞ்சரி : நுனிக்குருத்தில் தனி மலராகும்.
மலர் : இரு பாலானது. புனல் வடிவானது. பல்வேறு.அழகிய நிறங்களை உடையது. சிவப்பு. ஊதா, மஞ்சள், வெள்ளை வண்ணங்கள் உள. 3-5 செ.மீ. நீளமான மலர்கள்.
மலர்க் காம்பு : மிகச் சிறியது. 1.5-2.5 மி.மீ.
மலரடிச் செதில் : பசிய புல்லி போன்றது. அடியில் இணைந்து, சிறு குவளை வடிவாயிருக்கும். மேலே 5 நீண்ட பல் விளிம்புகள் காணப்படும்.
அல்லி வட்டம் : இதனைப் பீரியாந்த் என்பர். புல்லியும், அல்லியும் இணைந்தது. அடியில் நீண்ட குழல் வடிவானது. மேலே மடல் 5 இதழ்கள் போன்று விரிந்து இருக்கும்.
மகரந்த வட்டம் : 5 நீண்ட மகரந்தத் தாள்கள். விரிந்த மலரில் வெளிப்பட்டு நிற்கும். சமம் அற்றவை.
சூலக வட்டம் : ஒற்றைச் சூலகம்.
சூல் தண்டு : மெல்லியது. நீளமானது. அரும்பில் உட்புறமாக வளைந்துள்ளது.
சூல் முடி : சிறியது, உருண்டையானது.
சூல் : ஒன்று, ஆந்தோகார்ப் எனப்படும்.
கனி : கனி முதிர்ந்து ஒரு விதையாகும்.
கரு : இரு வித்திலைகள் உள்ளன.
கரு முளை : பட்டையாக வளைந்து, வித்திலைகளை ஒட்டியிருக்கும். படம். (Rondle Vol. 2, Р. 107)

இச்செடியின் தண்டில் இயல்புக்கு மாறான இரண்டாம் வளர்ச்சி உண்டாகும். இச்செடியின் பல்வேறு வகைகள், பலவேறு வண்ண மலர்களைத் தரும். இது ஓர் அழகுச் செடி, மாலையில் நான்கு மணி அளவில் பூக்கும். அதனால் இதற்கு நான்காம் மணிச் செடி (Foபr ‘O’ clock plant) என்று பெயர். இது பெரு என்ற நாட்டில் வளமாகத் தோன்றியது போலும். இதனால், இதனைப் பெருநாட்டின் அதிசயம் (Marvel of Peru) என்பர்.