பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/618

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

602

தாவரச் சிற்றினப் பெயர் : லனாட்டா (lanata)
சங்க இலக்கியப் பெயர் : குரீஇப்பூளை
உலக வழக்குப் பெயர் : சிறுபூளை, கண் பூளை, கண் பீளை
தாவர இயல்பு : சிறு செடி. ஓராண்டுச் செடி. ஒன்று முதல் 3 அடி உயரம் வரையில் ஓங்கிக் கிளைத்து வளரும். 3500 அடி உயரம் வரையிலான மலைப்புறத்தும் வளரும்.
இலை : சிறு இலை. அடியும், நுனியும் குறுகி இருக்கும். 1 அங்குலம் நீளமான இலையின் மேற்புறத்தில், மிக நுண்ணிய மயிரிழைகளும், அடிப்புறத்தில் வெள்ளிய மயிரிழைகளும் அடர்ந்திருக்கும்.
மஞ்சரி : வெண்ணிற மலர்கள் கிளை முழுவதும் ஒட்டிக் கொண்டு இருக்கும்.
மலர் : மிகச் சிறியது.
புல்லி வட்டம் : 5 இதழ்கள் மிகச் சிறியவை.
அல்லி வட்டம் : 5 பிளவுகள் போன்றிருக்கும்.
மகரந்த வட்டம் : 5. தாதிழைகள்; தாதுப்பை இரு செல் உடையது.
சூலக வட்டம் : உருண்டை வடிவமானது. ஒரு செல். சூல் தொங்கிக் கொண்டிருக்கும். சூல் காம்பு நீளமானது. சூல்முடி குல்லாய் போன்றது.
கனி : ‘காப்சூல்’ என்ற உலர்கனி, விதையுறை தடித்தது. வித்திலை நீளமானது.

இதன் மலர் மருத்துவத்தில் நீரடைப்பைப் போக்கும் நன்மருந்தாகும் என்பர். இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 16 என கஜபதி (1961) பால், எம் (1964) என்போர் கணக்கிட்டுள்ளனர்.