பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/628

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

612

சங்க இலக்கியத்

“அகரு வழைஞெமை ஆரம் இனைய<”
-(பரிபா. 12 : 4) என்பது காண்க.


இம்மரம், தைமீலியேசி (Thymelaeaceae) என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இக்குடும்பத்தில் 11 பேரினங்கள் இந்தியாவில் வளர்வதாக ‘ஹூக்கர்’ குறிப்பிட்டுள்ளார். இம்மரம் அக்குவிலாரியா என்னும் பேரினத்தைச் சேர்ந்தது. இப்பேரினத்தில் 2 சிற்றினங்கள் அஸ்ஸாம், பூட்டான் முதலிய நாடுகளின் மலைப் பகுதிகளில் வளர்கின்றன என்பர்.

இம்மரத்தின் தண்டு (கட்டை) நறுமணப் புகை தரும். இதனால், இது சந்தன மரத்துடன் சேர்த்துப் பேசப்படும். இதன் குரோமோசோம் எண்ணிக்கை கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

இதன் மரக்கட்டையில் ஒருவித எண்ணெய் இருக்கிறது. இதனை நெருப்பிலிட்டால், நறுமணப்புகை உண்டாகும். இம்மரம் மிக வலிமையுடையது.

காழ்வை—அகரு—அகில் தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரக் குடும்பம் : தைமீலியேசி
தாவரப் பேரினப் பெயர் : அக்விலாரியா (Aquilaria)
தாவரச் சிற்றினப் பெயர் : அகலோச்சா (agallocha, Roxb.)
தாவர இயல்பு : பெருமரம்.
தாவர வளரியல்பு : மீசோபைட். வடஇந்தியாவில், இமயமலைச் சாரலில் 10,000 - 15,000 அடி உயரத்தில் வளர்கிறது.
இலை : 2-3.5 அங்குல நீளமானது; தோல் போன்றது; பளபளப்பானது; காம்புள்ளது.