இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
634
சங்க இலக்கியத்
“அதவத் தீங்கனி அன்ன செம்முகத்
துய்த்தலை மந்தி வன்பறழ் தூங்க”-நற். 95 : 3-4
அத்திமரம் ஆற்றங்கரைகளில் வளரும் என்றும், இதன் கிளைகள் வெண்ணிறமானவை என்றும், இதன் கனி மிக மென்மையானது என்றும், நண்டு மிதித்த இதன் கனி குழையும் என்றும் கூறும் குறுந்தொகை.
“ஆற்றயல் எழுந்த வெண்கோட் டதவத்து
எழுகுளிறு மிதித்த ஒருபழம் போல”-குறு. 24 : 3-4
அதவம்—அத்தி தாவர அறிவியல்
தாவர இயல் வகை | : | பூக்கும் இரு வித்திலைத் தாவரம் |
தாவரத் தொகுதி | : | அர்ட்டிசிபுளோரே (urticiflorae) என்னும் இத்தொகுதியில் மானோகிளமைடியே என்றதொரு பிரிவு உண்டு. அதில் அத்திக் குடும்பம் சேர்க்கப்பட்டுள்ளது. |
தாவரக் குடும்பம் | : | மோரேசி (Moraceae) |
தாவரப் பேரினப் பெயர் | : | பைகஸ் (Ficus) |
தாவரச் சிற்றினப் பெயர் | : | குளோமெரேட்டா (glomerata) |
சங்க இலக்கியப் பெயர் | : | அத்தி |
சங்க இலக்கியத்தில் வேறு பெயர் | : | அதவம் |
உலக வழக்குப் பெயர் | : | அத்தி |
தாவர இயல்பு | : | சிறு மரம். இதில் ஆண்மரமும், பெண்மரமும் உண்டு. இதன் பேரினத்தில் ஏறத்தாழ 700 சிற்றினங்கள் உலகில் உள்ளன என்பர். தமிழ் நாட்டில் 27 சிற்றினங்கள் உள்ளன என்பர் காம்பிள். இவற்றுள் பெருமரங்களும் கொடியும் உள்ளன. |