பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/696

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

680

சங்க இலக்கியத்

இதைக் கண்ட கன்று தன் தாய்ப்பசுதானோ என ஐயுற்று மருண்டதாம். இதோ அப்பாடற்பகுதி :

“சிலம்பின் மேய்ந்த சிறுகோட்டுச் சேதா
 அலங்குகுலைக் காந்தள் தீண்டித் தாதுக
 கன்றுதாய் மருளும் குன்ற நாடன்”
-நற். 359 : 1-3

காந்தள் மலை நிலத்தைச் சேர்ந்த குறிஞ்சித் தாவரம். இது

“விண்பொரும் சென்னிக் கிளைஇய காந்தள்” -குறிஞ். 196

என்ற வண்ணம் மலையின் தலை உச்சியிலும்

“நெடுவரை மிசைஇய காந்தள் மெல்விரல் -பொருந. 33

என்ற வண்ணம் மலையின் உடற் பகுதியிலும்,

“. . . . . . . . நறுங்கார் அடுக்கத்துப்
 போந்தை முழுமுதல் நிலைஇய காந்தள்”
-அகநா. 238 : 15-16

என்ற வண்ணம் பக்க மலைகளிலும்

“. . . . . . . . . . . .காந்தள்
 கொழமடல் புதுப்பூ ஊதும் தும்பி
 நல்நிறம் மருளும் அருவிடர்”
-அகநா. 138 : 17-19
“. . . . . . . . . . . .விடர் முகைச்
 சிலம்புடன் கமழும் அலங்கு குலைக்காந்தள்”
-குறுந். 239 : 2-3

என்ற வண்ணம் மலைப் பிளவுகளிலும்

“நெடும்பெருங் குன்றத்தமன்ற காந்தள்” -அகநா. 4 : 15

என்ற வண்ணம் பெருங்குன்றுகளிலும் வளருமென்தை அறியலாம். மேலும்,

“மலைச் செங்காந்தள் கண்ணி தந்தும்” -நற். 173 : 2
“போதுபொதி உடைந்த ஒண் செங்காந்தள்
 வாழையஞ் சிலம்பின் வம்புபடக் குவைஇ”
-நற். 176 : 6-7
“. . . . . . . . . . . .ஒண் செங்காந்தள்
 கல்மிசைக் கவியும். . . . . . . . . . . .”
-குறுந்., 185 : 6-7