பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/738

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

722

மலர்களும் இருக்கும். இவை மஞ்சரி மேலே உண்டாகும் பெண் மலர்கட்கு மேலேயும், ஆண் மலர்கட்கு அடியிலேயும் உண்டாவதும் உண்டு.
புல்லி, அல்லி வட்டங்கள் : இல்லை.
மகரந்த வட்டம் : ஆண் மலரில் 1-3 தாதிழைகள் தாதுப் பைகளைத் தாங்கி நிற்கும்.
சூலக வட்டம் : பெண் மலரில் ஒரு செல் சூலகம்; சூல் தண்டு சூலகத்தையொட்டி இருக்கும். 1-2 சூல்கள் உண்டாகும். இலை ‘ஆர்த்தோட்ரோபஸ் ஓவியூல்’ எனப்படும்.
கனி : பெர்ரி என்ற சதைக்கனி. முட்டை வடிவானது. 1-2 விதைகளை உடைய விதை உருண்டையானது. மிகுந்த ‘ஆல்புமின்’ உள்ளது. கரு-சூல் தண்டில் ஒட்டியிருக்கும்.

சேம்புச் செடி சேப்பங்கிழங்கிற்காகப் பயிரிடப்பட்டு வருகின்றது உணவுப் பொருள். இது முன்பு டைபோனியம் கஸ்பிடேடம் என்று கூறப்பட்டது. இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 16 என சர்மா, ஏ. கே. கணக்கிட்டுள்ளார்.

உலகிலேயே மிகப் பெரிய மஞ்சரியை உடையது ஒரு வகையான சேம்பு ஆகும். மஞ்சரி ஏறத்தாழ 6 அடி உயரமானது. இதற்கு டைபோனியம் ஜைஜாண்டியம் என்று பெயர்.