பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/760

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

744

மஞ்சரி : கலப்பு மஞ்சரி. 3 அடி வரை நீளமானது. கிளைகளை உடையது. மிக வெள்ளியது. நீண்ட வெண்மையான பட்டுப் போன்ற மயிரிழைகள் அடர்ந்திருக்கும்.
மலர் : பிளாரெட் (சிறு பூ) எனப்படும். ‘குளும்’ (glume) எனப்படும் உமி-2. ஒரே மாதிரியானவை. வெண்ணிறமானவை. அடியில் சற்றுத் தடித்தும், நுனியில் மெல்லியதாகவும் இருக்கும். புறத்தில் இவை கருமையாக இருக்கும். இதற்குள் வெள்ளையான இரு ‘லெம்னா’ (lemna) இருக்கும். அடியில் உள்ளதில் ஒன்றுமிராது. மேற்புறமுள்ளது நுண்மூக்குடையது. இதில் மலர் உறுப்புகள் காணப்படும்.
லாடிக்யூல் : இரண்டும், மூன்று தாதிழைகளும், சூலகமும் இருக்கும். சூல்தண்டு இரண்டாகப் பிரிந்திருக்கும்.
சூலகம் : இதில் கரு உண்டாகும். இது சற்று நீளமானது. இதுவே தாதுச் சேர்க்கை ஆனதும், விதையாக முதிரும்.

‘கல்ம்’ என்ற இதன் தண்டு கரும்பு ஆகும். இதில் இனிய சாறு உண்டாகும். இச்சாற்றைப் பிழிந்து, காய்ச்சி, வெல்லம், சருக்கரை கூட்டுவர். கரும்பு இந்தியாவிலும், சீலங்காவிலும் பயிரிடப்படுகிறது. கரும்பிலிருந்து சாறு பிழிந்து, எஞ்சிய சக்கை, காகிதம் செய்வதற்குப் பயன்படும். இதன் இலைகள் மக்கிப் போய் நல்ல எருவாகும்.

கரும்பு எந்த நாட்டைச் சேர்ந்ததெனத் தெரியவில்லை என்று ஹூக்கர் கூறுவர். கரும்பின் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 60, 80, 90 எனப் பிரெமெர் (1931) என்பாரும் 2n = 80 எனச் சானகி அம்மாள் (1941) நிஷியாமா (1956) என்பாரும், பிறரும் கணக்கிட்டுள்ளனர்.