பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/771

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

755

முதிர்ந்து விளையும் நெற்பயிர்களும் இந்நாளில் உருவாக்கப்பட்டுள்ளன. 2000 அடி உயரமான வரையிலும் வளர்கிறது. இதன் தண்டு தான் ‘கல்ம்’ எனப்படும்.
இலை : 4-22 அங். நீளம் வரையில் இருக்கும். அகலம் 1-3 அங்.
மஞ்சரி : கதிர் 2-5 முதல் 12 அங்குலம். வரை நீளமானது. பல ‘ஸ்பைக்லெட்’ இருக்கும்.
மலர் : இரு உமிகள் மலருறையாக இருக்கும். இவற்றிற்குள் லெம்னா இருக்கும். இதில் இரு பாலான மலர் உறுப்புகள் காணப்படும். 6 மகரந்தத் தாள்களும், ஒரு செல் சூலகம் இரண்டாகக் கிளைத்த சூல்தண்டும் உள்ளன.
கனி : பெரிதும் அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெறும். பால் கட்டி, அரிசி முதிர்ந்து, நெல்லாகி முதிரும்.

இந்நாளில் செயற்கை ஒட்டு முறையில் பல வகைப்பட்ட நெல் வகைகள் உருவாக்கப்பட்டுள்ளன. குறுகிய காலத்தில் விளைதலும், சத்துக் குறையாமல் மிகுதலும், நோய் தாக்கப்படாதிருத்தலும், நீர் வளம், நில வளம், இவைகட்கு ஏற்ப நன்கு விளைதலும் ஆகிய பண்புகளைக் கொண்ட புதுப் புது நெல்வகைகள் நமது நாட்டிலும், பிலிப்பைன்ஸ், ஜப்பான் போன்ற அயல் நாடுகளிலும் உருவாக்கப்படுகின்றன.

இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 24 என்று குவாடா (1940), மோர்னாகா, குரியாமா (1954), சென் (1963) முதலாகப் பலர் கணித்துள்ளனர்.

சோற்று உணவுக்காக நெல் நமது இந்திய நாட்டில் பண்டைக் காலந் தொட்டுப் பயிரிடப்பட்டு வருகிறது. அரிசியில் சர்க்கரைப் பொருள் மிகுதியாகவும், புரதச் சத்து மிகக் குறைவாகவும் இருக்கிறது.