பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/786

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

770

நற்றிணை உரையாசிரியர் மணிநிற இரும்புதல் என்பதற்கு ‘நீலமணியின் நிறம் போன்ற, கரிய புதர்களிலுள்ள’ என்று உரை கூறுவதில் நீலமும், கருமையும் முரணுமாறு காண்க. மேலும், இரும்புதல் என்பதற்குப் பெரிய புதல் என்றுரைப்பது ஒக்கும். இன்னும் அவர் ‘மணி நிற இணரை உடையது எறுழ மலரெனினுமாம்’ என்று உரை காண்பது பொருந்தாது. அவர் நல்லிணர் தெறுழ் என்பதை-நல்லிணர்த்த எறுழ்வீ-எனப் பிரித்து தெறுழ்வீயை எறுழ்வீயாக்கி விடுகின்றார். மேலும் மணி நிற இரும்புதல் என்பதை மாற்றி, மணி நிறத்தைப் புதலுக்காக்காமல், தெறுழ் மலருக்கு ஏற்றுவதும் பொருந்தாது. என்னை? தெறுழ்வீயானது, வண்ண வடிவ உவமங்களால் வரகின் பொரிப் போல் மலர்வது எனக் கூறப்படும்; மேலும் எறுழ்வீ என்பது ‘எரிபுரை எறுழம்’ என்று பேசப்படுதலின் என்க. எனினும், இம் மூன்று பாடல்களைக் கொண்டு தெறுழ்வீ என்பது தாவரவியலில் எது என்று அறிய முடியவில்லை.