பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/788

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

772

சங்க இலக்கியத்

இதற்கு ‘ 'யா' என்னும் மரத்தை உணர நின்ற சொல்லும், 'பிடா' என்னும் சொல்லும், 'தளா' என்னும் சொல்லுமாகிய அம்மூன்று பெயரும், வல்லெழுத்து மிகாது மெல்லெழுத்து மிக்கு முடியும்' என்று உரை கூறுவர் இளம்பூரணர்.

இக்குறிப்புகளைக் கொண்டு 'யா' என்பது ஒரு பாலை நில மரமென்றறிவதல்லது, அதன் தாவரப் பெயரைக் கண்டு கூற இயலவில்லை.

சங்க இலக்கியப் பெயர் : யா
தாவரப் பெயர் : தெரியவில்லை