பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/91

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
 

நறவம்-நறை-நறா-நறவு
பிக்சா ஓரிலானா
(Bixa orellana-Linn.)

கபிலர் கூறும் ‘நந்தி நறவம் நறும் புன்னாகம்’ என்னும் குறிஞ்சிப் பாட்டடியில் (91) வரும், ‘நறவம்’ என்பதற்கு நச்சினார்க்கினியர் ‘நறைக்கொடி’ என்று உரை கண்டார். இது ஒரு புதர்க்கொடி: நறுமணம் மிகவும் உடையது. இதன் மலர் சிவப்பானது. நீண்ட அகவிதழ்களை உடையது. இதழ்களில் உள்ள வரிகளைக் கூர்ந்து நோக்கி, இவற்றை மகளிரின் செவ்வரி படர்ந்த கண்களுக்குப் புலவர்கள் உவமித்துள்ளனர்.

சங்க இலக்கியப் பெயர் : நறவம்
சங்க இலக்கியத்தில் வேறு பெயர் : நறை, நறா, நறவு.
பிற்கால இலக்கியப் பெயர் : நறவங்கொடி
தாவரப் பெயர் : பிக்சா ஓரிலானா
(Bixa orellana,Linn.)

நறவம்-நறை-நறா-நறவு இலக்கியம்

கபிலர் “நந்தி நறவம் நறும் புன்னாகம்” (குறிஞ்சி 91) என்றார். இவ்வடியில் வரும் ‘நறவம்’ என்பதற்கு ‘நறைக்கொடி’ என்று பொருள் எழுதியுள்ளார் நச்சினார்க்கினியர். குறிஞ்சிப் பாட்டில் வரும் ‘காந்தள் ஆம்பல் அனிச்சம்’ முதலாய எல்லாப் பெயர்கட்கும் அவற்றின் ‘பூ’ என்றே உரை கூறும் நச்சினார்க்கினியர், நறவம் என்பதற்கு ‘நறைக்கொடி’ என்று கூறுவது சிந்திக்கற்பாலது.

“மந்திக் காதலன் முறிமேய் கடுவன்
தண்கமழ் நறைக்கொடி கொண்டு வியல்அறைப்
 பொங்கல் இளமழை புடைக்கும் நாடே”
-ஐங் 276 : 1-3

இப்பாட்டில் கடுவன் நறைக்கொடியைக் கொண்டு புடைக்கும்