162 சங்க இலக்கியம்
வணிகச் செல்வர்கட்கு எட்டிப்பட்டமும், எட்டிப்பூவும் அளித்துச் சிறப்பித்தனர். காவிரிப்பூம்பட்டினத்தில் சாயலன் என்னும் வணிகன் எட்டிப்பட்டம் பெற்றிருந்ததைச் சிலப்பதிகாரம் கூறுகிறது.
எட்டிச் சாயலன் இருந்தோன் தனது பட்டினி நோன்பிகள் பலர்புகு மனையில்
-அடைக்கலக் காதை. 163-164
எட்டிப்பட்டம் பெற்றிருந்த ஒரு வா னி க ைன மணிமேகலைக் காவியம் கூறுகிறது.
வணிக மரபின் வருபொருள் ஈட்டி நீள் நிதிச் செல்வனாய் நீனில வேந்தனில் எட்டிப் பூப்பெற்று இருமுப்பதிற் றியாண்டு ஒட்டிய செல்வத்து உயர்ந்தோன் ஆயினான்
unলতf . 22, 11 1-1 14
பிறநாட்டு வாணிகம்
தமிழ் வாணிகர் அயல்நாடுகளுக்குச் சென்று வாணிகம் செய்தது போலவே அயல்நாட்டு வாணிகரும் தமிழகத்துக்கு வந்து வாணிகம் செய்தனர்.
மொழிபெயர் தேத்தோர் ஒழியா விளக்கம்
-சிலம்பு. 6:43
மொழி பல பெருகிய பழிதீந் தேஎத்துப்
புலம்பெயர் மாக்கள் கலந்தினிதுறையும்
முட்டாச் சிறப்பிற் பட்டினம்
-பட்டினப்பாலை. 216-218
இப் பகுதிகள் அக்காலத்தில் வணிகத்தில் உலகப் புகழ் பெற்ற காவிரிப்பூம்பட்டினத்துத் துறைமுகத்திலே அயல்