178 சங்க இலக்கியம்
மகா அரன்ன மந்தி மடவோர் நகா அரன்ன நளிநீர் முத்தம் வாள்வா யெருந்தின் வயிற்றகத் தடக்கி
டசிறுபாண். 36.58
மறப்போர்ப் பாண்டியர் அறத்திற் காக்கும் கொற்கையம் பெருந்துறை முத்தின் அன்ன
-அகம். 27:8.9
இவர் திறை தந்த ஈர்ங்கதிர் முத்தம்
கவர்நடைப் புரவிக் கால்வடுத் தபுக்கும்
நற்றேர் வழுதி கொற்கை முன்றுறை
-அகம். 180:9-10
வினை நவில் யானை விறற்போர்ப்பாண்டியன்
புகழ்மலி சிறப்பிற் கொற்கை முன்றுறை
அவிர்கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து
-அகம். 201:3.5
காண்டொறும் கலுழ் த லின்றியு மீண்டுகின் முத்துப்படு பரப்பிற் கொற்கை முன்றுறை | 一岳位,25:5-6 இவற்றிலிருந்து கொற்கைத் துறைமுகத்தின் சிறப்பினையும் அங்கு விளையும் முத்துக்களையும் பற்றி அறிய முடிகிற தன்றோ.
இவ்வாறே கொல்லம், எயிற்பட்டினம், அரிக்கமேடு (பொதவுகே) தொண்டி, மருங்கூர்ப்பட்டினம், குமரி, மங்களுர், நறவு, மாந்தை, வைக்கரை, மேல்கிந்த முதலிய துறைமுகங்களும் வணிகத்துறையில் சிறந்து விளங்கின.
வணிகர் பண்பு
பண்டைக் காலத்தில் தமிழகத்தில் வணிகம் உலக நன்மைக்காகவே நடந்து வந்தது. பொருள் ஈட்டுவது