99
எதிர் நில்லாதே என்று தலைவி கூறும்பொழுது, 'என் தந்தை பெயரைக் கொண்டவனை நான் அணைத்துக் கொள்வேன்? உனக்கென்ன?' என்று கூறிவிட்டுக் கன்று இருக்குமிடம் செல்லும் பசுப் போல மகனிருக்குமிடம் பாய்ந்து செல்வான் தலைவன்".[1]
இவ்வாறு மருதக்கலியில் ஒரு காட்சி இடம் பெறுகின்றது.
புதியதாகத் திருமணம் செய்து கொள்ளச் செல்லும் தலைவனைத் தடுத்து நிறுத்திய குழந்தையொன்றைப் பற்றிய செய்தி அகப்படாலொன்றில் பேசப்படுகின்றது. [2]
எனவே இத்தகு மகனைப் பெற்ற மகளிர்தம் சிறப்புச் சொல்லவும் வேண்டுங்கொல்?
மகளிர் கூத்தும் விளையாட்டும்
'மகளிர் துணங்கை நாளும் வந்தன்'[3] என்று கூறி மகளிர் தம்முன் தழுவி ஆடுகின்ற துணங்கைக் கூத்தை நிகழ்த்துவது பண்டைய வழக்கமாகும்.[4] அது பொழுது அவர்கள் விரும்பும் ஆடவர் அவர்க்கு முதற்கை கொடுத்தல் மரபு.[5]
திருமணத்திற்கு முன் தோழியரோடும், திருமணத்திற்குப்பின் தம் தலைவியரோடும் புனலாடச் (swimming) செல்வது என்பது வழக்கம்.[6]