43
மேலும், 'வந்தார் அனைவருக்கும் நல்வரவேற்பு நல்கும் வளமனை'[1] என்றும் 'உலகமே புகுந்தாலும் பல ரோடு சேர்ந்து விருந்துண்ணத் தக்க வாயில்'[2] என்றும் விருந்தோம்பும் செல்வமனைகள் பேசப்படுகின்றன. விருந்து' கணவன் மனைவியரிடையே ஊடல் (sulkiness) தீர்க்கும் வாயிலில் (channel) ஒன்றாகவும் கருதப்பட்டது.[3]
சுற்றம் ஓம்புதல்
'சுற்றம் ஒம்புதல்’ என்ற தொடருக்கு உறவினர்களை உண்டி முதலியன தந்து பாதுகாத்தல் என்பது பொருளாகும்.
நச்சினார்க்கினியர் இத்தொடருக்குப் பல செய்திகளை உள்ளிட்ட அரியதோர் விளக்கத்தினைத் தம் பொருளதிகார உரையில் வழங்கியுள்ளார். அவ்வுரை வருமாறு;
"கொண்டோன், புரக்கும் நண்புடை மாந்தரும், சுற்றத்தாரும் குஞ்சரம் முதலிய காலேசங்களும் (கால் நடைகள்- cattle) பல படைமாக்களும் உள்ளிட்ட சுற்றங்களைப் பாதுகாத்து அவை உண்டபின் உண்டல்" என்று உரையெழுதியுள்ளார்.[4]
முதலாவது தன் கணவன் உவக்க அட்டிற்றொழிலில் (சமையல் தொழில்) மனைவி மேம்பட்டிருக்க வேண்டும்.