பக்கம்:சங்க கால வள்ளல்கள்.pdf/89

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
புறநானூறு

முரசுகடி இகுப்பவும் வால்வளை துவைப்பவும்
அரசுடன் பொருத அண்ணல் நெடுவரைக்
கறங்குவெள் அருவி கல்அலைத்து ஒழுகும்
பறம்பில் கோமான் பாரியும், பிறங்குமிசைக்
கொல்லி ஆண்ட வல்வில் ஓரியும் காரி
ஊர்ந்து பேர் அமர்க் கடந்த
காரி ஈகை மறப்போர் மலையனும்
ஊராது ஏந்திய குதிரைக் கூர்வேல்
கூவிளங் கண்ணிக் கொடும் பூண் எழினியும்
ஈர்ந்தண் சிலம்பின் இருள் தூங்கும் நளிமுழை
அருந்திறல் கடவுள் காக்கும் உயர்சிமைப்
பெருங்கல் நாடன் பேகனும் திருந்து மொழி
மோசி பாடிய ஆயும் ஆர்வம் உற்று
உள்ளி வருவர் உலைவு நனி தீரத்
தள்ளாது ஈயும் தகைசால் வண்மைக்
கொள்ளார் ஓட்டிய நள்ளியும் என ஆங்கு
எழுவர்.

-பெருஞ்சித்திரனார்