138 சடகோபன் செந்தமிழ், கொண்ட பெண்டிர் (9.1) என்ற ஒரு திருவாய்மொழி முழுதும் வடமதுரைப் பற்றிய மங்களா சாசனமாக அமை கின்றது. நெடுமாற்கடிமை (8.10) என்ற திருவாய்மொழி யில் பாகவதர்களின் பெருமையை வெளியிட்டார். இங்கு (9.1) பகவானுடைய பெருமையை வெளியிடுகின்றார். பாகவதர்களே எல்லா உறவும் என்றது. கீழ்த் திருவாய் மொழி, பகவானே எல்லா உறவும் என்கின்றது. இத்திருவாய் மொழி. இவை ஒன்றோடொன்று முரண் பட்டவை அன்று. பகவத் பக்தியின் எல்லை நிலமாக பாகவத பக்தியையும், பாகவத பக்தியின் எல்லை நிலமாக பகவத் பக்தியும் கொள்ளத் தக்கது. ஒன்றில் வைக்கும் பக்தி பிறிதொன்றி லும் பெருகி வளரும். இத்திருவாய்மொழியில் பலபாசுரங் களில் வடமதுரையில் பிறந்த என்று வருவதால் இது வடமதுரையை மங்களா சாசனம் செய்கிற திருவாய்மொழி யாகக் கொள்ளலாம். இனி, பாசுரங்களின் பொருளில் ஆழங்கால் படுவோம். - o "ஒரு காரணம் பற்றி வந்த மனைவி, புத்திரர்கள் முதலானவர்களால் ஒரு பயனும் இல்லை; இயல்பாகவே பந்துவாய் இருக்கின்ற சர்வேசுவரனே ஆபத்துக்குத் துணை வன்; அவனையே பற்றி உய்யுங்கள் என்கின்றார் முதல் பாசுரத்தில். ... " - . . . ." கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத் தவர்.பிறரும் கண்டதோடு பட்ட - - . தல்லால் காதல்மற் றியாதுமில்லை சிறைக் கூடமும் நல்ல முறையில் சலவைக் கல்லால் அமைக்கப் பெற்றுள்ளது. மதுரை நகரினுள் துவாரகை நாதர் கோயில், மதுரைநாதர் கோயில் என்ற திருக்கோயில்கள் உள்ளன. துவாரகை நாதர் கோயில் செல்வச் செழிப்பில் திருமலைக் கோயிலை நிகர்த்தது. - . . . . . . . . . .
பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/177
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை