பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோழிப் பாசுரங்கள் 215 சொல்லப்புக்கு இனியனான தன்னைக் கண்ட காட்சியாலே தடுமாறினால், குறையும் தலைக்கட்டிக் கொடுப்பது செவ்வரி படர்ந்த திருக்கண். அவனது நோக்கிற்குத் தோற்றாரை அணைப்பது திருக்கை. உத்தேசியமான நிலத் தில் (அதாவது திருவடியில்) விழா நின்றால் காற்கட்ட வல்லது திருவுந்தி. இது நடுவே அமுக்கும் சுழியன்றோ? இவை எல்லாவற்றுக்கும் தோற்று விழும் இடம் எம்பெரு மானது திருவடிகள். இவை யாவும் காட்டிலெறிந்த நிலாப் போலாகாமல் பக்தர்கட்கு அநுபவிக்கக் கொடுக்குமவன் என்பதைக் குறிப்பிடவே'பிரான் (உபகாரகன்)என்கின்றாள். இங்ங்ணம் எம்பெருமானின் திருமேனி அழகினை, என்அரங்கத்து இன்னழுதர் குழலழகர் வாயழகர் கண்அழகர் கொப்பூழில் எழுகமலப் பூஅழகள் (நாச், திரு. 11 : 2) (குழல் - திருமுடி) - என்று ஆண்டாள் கூறி அநுபவித்ததையும் நினைந்து பார்க் கின்றோம். மேலும், இங்குப் பரவி ஆகம் விபவம் இவற்றிற் குரிய திருநாமங்களையும் சொல்ல்ாமல் அல்லாதஉகந்தருளின் திவ்விய தேசங்களில் நிற்கின்றவர்களின் பெயர்களையும் சொல்லாமல் குட்டநாட்டுத் திருப்புலியூர் எம்பெருமா னுடைய திருநாமங்களையே வாய்வெருவா நிற்கின்றாள் என்பது தோன்ற, திருப்புலியூர், அருமாயன் பேரன்றிப் பேச்சிலள்’ என்கின்றாள். அவள் நிலை தனக்கு அப்போது தான் தெரியும் என்பது தோன்ற அன்னைமீர் இதற்கு என் செய்வேன்? என்கின்றாள். இந்த எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் திருப்பதியைச் சதா புகழ்ந்து கொண்டிருக்கிறாள் தலைவி என்பதனையும் குறிப்பிடுகின்றாள் புன்னையம் பொழில் சூழ் திருப்புலியூர் புகழும் இவளே (2) என்பதாக,