பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 சடகோபன் செந்தமிழ் உண்டுகளித் தேற்கு உம்பரென்குறை மேலைத் தொண்டு உகளித்து அக்தித்தொழும் சொல்லுப் பெற்றேன் (7): (உ.ம்பர்-மேலுலகம்; அந்தித் தொழும் அதிசயித்து; சொல் - நம’ என்பது) "இப்படிப் பட்ட அநுபவம் பெற்றுக் களிப்பதைவிடப் பரமபதாதுபவத்தில் என்ன சிறப்பு உள்ளது? (அதில் விருப்பம் உடையேம் அல்லேம் என்பது கருத்து). கைங்கரிய ரசம் அதிசயித்தால் அதன் எல்லையான நிலைமையிலே சொல்லக் கடவதான தொழும் சொல் நம்; என்பது; இது தான் முடிவான பேறு: இதனையும் இங்குப் பெற்றேன்” என்கின்றார். உகளித்து. கண்ணுள் கின்றகலான் கருத்தின்கண் பெரியன்; எண்ணில் நுண்பொருள் ஏழிசையின் சுவைதானே(8) (கண்ணுள் நின்று-கண்ணை விட்டு:கருத்து-மனோரதம்; எண்ணில்-சிந்திக்கப் புகுதல்) என்று பேரன்பே வடிவெடுத்தவனாய், ஏழிசையின் சுவையே உருக்கொண்டவனாய், தன்னை விட்டு ஒரு நாளும் நீங்க மாட்டாதவனாய்த் தன்னுள் புகுந்த படியைப் பேசுகின்றார். அடுத்து, ஆழ்வார் எம்பெருமானை நோக்கி வினா வொன்று எழுப்புகின்றார். இன்றென்னைப் பொருளாக்கித் தன்னைஎன்னுள் வைத்தான் அன்றென்னைப் புறம் யோகப் புணர்த்த தென்செய்வான் (9)