பக்கம்:சடுகுடு ஆட்டம்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

சடுகுடு ஆட்டம்


அதனால் சிக்கல், உடலில் வலி, இதை உணர்ந்து கொண்டு, தப்பிக்க வழியில்லாதபொழுது, ‘டக்கென்று’ பாட்டை நிறுத்திக்கொள்வது மரியாதை. அதுவே அபாயமில்லாத ஆட்டமாகும்.

6. எதிர்க்குழு பகுதிக்குப் போகவும், பாடத் தொடங்கவும் முன்பாக, எங்கெங்கே, யார் யார் நிற்கின்றார்கள் என்பதையும் நன்றாகக் கவனித்தவாறு தான் முன்னேறிட வேண்டும். அதுவும் ஒரு பக்கமாகத் தான் (Side) போக வேண்டும். நடு ஆடுகளத்திற்குள்ளே செல்லக்கூடாது.

7. தனக்குத் தெரிந்த சாகச வேலைகளையெல்லாம் (Tricks) பாடிப் போனவுடனேயே காட்டிவிடக் கூடாது. ஒவ்வொரு முறை பாடிப் போகும்பொழுதும், சமயத்திற்கேற்றாற் போல, ஒவ்வொரு திறமையைக் காட்ட வேண்டும். அதுவே அறிவார்ந்த ஆட்டமாகும்.

8. பலர் பிடித்திருந்தாலும் அவர்களிடமிருந்து விடுபட்டுத் தப்பித்து வருவதென்பது உடல் சக்தியை மட்டும் பிரயோகித்து அல்ல. திறனும் மனோ வல்லமையும் சேர்ந்த சமயோசிதப் புத்தியினாலுந்தான். ஆகவே, ஆட்டம் பழகிக்கொள்ளும் நாட்களிலேயே இந்தத் திறமையையும் நன்கு கற்றுக்கொள்ள வேண்டும்.

9. எதிர்க்குழுவில் ஒன்று அல்லது இரண்டு ஆட்டக்காரர்கள் எஞ்சி நிற்கும்பொழுது, நல்ல சாதுர்யம் நிறைந்த சமயோசிதப் புத்தியுள்ள ஆட்டக்காரரையே பாடிச் செல்ல அனுமதிக்க வேண்டும். அப்பொழுதுதான் எளிதாக அவர்களைத் தொட்டுவிட்டு வெற்றி எண்கள் பெறுவதுடன், மேலும் ‘லோனா’வையும் பெற முடியும்.