பக்கம்:சடுகுடு ஆட்டம்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா

129


6. காலை ஒருவர் பிடிக்கும்பொழுது, பிடிபட்டவர் கீழே விழுந்து கையால் நடுக்கோட்டைத் தொட முயற்சிப்பது இயல்பே. அப்பொழுது, அவர் கையை அப்படியே தூக்கிப் பிடித்திட மற்றவர்கள் முயல வேண்டும். இந்தப் பிடி முறையைப் பக்குவமாகச் செய்தால், ஆட்டத்தில் நல்ல பலன் அடிக்கடி கிடைக்கும்.

7. ஒற்றைச் சங்கிலிப் பிடி முறை (Single Chain) என்ற பிடித்தாடும் ஆட்டமுறை உண்டு. ஐந்து ஆட்டக்காரர்கள் கடைக் கோட்டருகில் நிற்க, இரண்டு பேர் தங்களது ஒரு கையைக் கோர்த்தவாறு நடுக்கோட்டருகில் வந்திட, அவர்களுக்கு நடுவிலே பாடிக் கொண்டிருப்பவரை இருக்குமாறு வைத்துப் பிடித்துவிடுவது.

குறிப்பு: 5 புள்ளிகள் பிடிக்கும் ஆட்டக்காரர்கள், ஒரு புள்ளி நடுவிலே மாட்டிக்கொண்ட பாடும் ஆட்டக்காரர், பின்னால் கோடு இணைக்கப்பெற்ற இரண்டு புள்ளிகள், ஒற்றைச் சங்கிலி முறையால் பிடிக்க முயலுதல்.

8. இரட்டைச் சங்கிலிப் பிடிமுறை (Double chain), இதில் இடைக்கோட்டருகில் மூன்று ஆட்டக்காரர்கள் நிற்க, அவர்களைத் தொட வந்த பாடுபவர் மத்தியில் சிக்கிக் கொள்ள, இரண்டு இரண்டு பேர் தங்கள் தங்கள் கையைக் கோர்த்துக்கொண்டு பிடிக்க முயற்சிக்க வேண்டும்.