பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



113| 24. திருவள்ளுவரும் ஞானவெட்டியும் நமது தமிழகஞ்செய்த தவப்பயனாகத் தோன்றித் திருக்குறளெனும் தெய்வப்பனுவலையருளிய ஆசிரியர் திருவள்ளுவ னாரின் அருமை பெருமைகளை யறியாதார் மிகவுஞ் சிலரேயாவர். இப்பெரியார் அருளிய திருக்குறளை, அது தோன்றிய நாண் முதல் எம்மதத்தினரும் தம்மதத்திற்குரிய நூலென்று கூறி வருவதுடன், தமிழ்மொழிவழங்காப் பிறதேயத்தினரும் அதனை நன்கு படித்துத் தத்தம்பாஷைகளில் மொழிபெயர்த்து மிகப்பாராட்டியும் வருவாராயினர். . இம்மகானது தெய்வப்புலமையையும் இவரருளிய நூலினருமையையும் நன்குணரப்பெறாத மாந்தர்சிலர், இற்றைக்கு இரண்டு மூன்று நூற்றாண்டுகளுக்குள் இயற்றப்பட்டு வெளிவந்துள்ள ஞானவெட்டி யென்னும் நூலைக்கண்டு மயக்கமுற்று இந்நூலியற்றினோரும் திருக்குறளருளிய திருவள்ளுவனாரென்றே உண்மையறியாமற் கூறிவருகின்றனர். அன்னோர்கூற்று வலியுடைத்தாவென்பதை யீண்டாராய்வாம். ஞானவெட்டியின் ஆசிரியர், ஆரியத்திலும் தமிழிலும் ஒப்பற்ற புலமையும் தெய்வத்தன்மையும் வாய்ந்த சிலபெரியோர்களையும், அன்னோர் நம்மவர்கட்குப் பெரிதும் பயன்படும் வண்ணம், இயற்றியருளிய நூல்களையும், பொறாமை செருக்காதி குறும்புகள் விளைப்பதாய் முக்குணக்கடைநிற்குந் தாமதக்குணச் சேட்டையாலோ அன்றிப் பிறிதென்கொண்டோ, தம்நூலில் வாய்கூசாது நிந்தித்திருக்கின்றனர். அச்செய்யுட்களைக் கீழே தருகின்றோம். வியாசர்சொல்லும்பாரதத்தில் வெகு பொய்வீணாம் மேதினியோர் மாய்கையினில்விருப்பஞ் சொன்னார் ஆய்ந்துகளி பாடிவிட்டான் கம்பன்வம்பன் அதீதராமாயணத்தில் நேகம் பொய்தான் சாயாமலதிவீரபாண்டியன் சொல்லும் தமயந்திசரித்திரநைடதமுஞ் சொன்னார் சுயமாகாது திகவிகள்சுத்தப் பொய்தான் தொடுகவிமாணிக்கவாசகர் சொன்னாரே. (ஞானவெட்டி 579) தேவராமானதிருவாசகத்தைச் செகத்தோர்கள் படித்து மெத்தத்தியங்கினார்கள் பேயானவாண்டிகட்குப் பிழைப்புக்காகப்