பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



123 பரிமேலழகர் முதலிய தொல்லுரையாசிரியர் பலரானும் அன்னோர் உரைகளில், இக்கல்லாடச் செய்யுட்கள் எடுத்தாளப்படவில்லை யாதலின், இந்நூலுடையார் மேற்கூறிய உரையாசிரியர்களின் காலத்திற்குப் பிற்பட்டவரென்றுகூறல் சாலப்பொருந்து மென்க. இவர்களுள், பேராசிரியரும் அடியார்க்குநல்லாரும் - நச்சினார்க் கினியருக்கு முந்தியவர்களென்பது சரித்திரவாராய்ச்சி செய்யும் அறிஞர் பலரும் அறிந்தவிஷயம். நச்சினார்க்கினியரும் பரிமேலழகரும் கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்களாதலின், நம்மாசிரியரும் கி.பி. - 13-ஆம் நூற்றாண்டிற்குப் பின்னரே இத்தமிழகத்தில் விளங்கியவராதல் வேண்டும். இனிக் “கல்லாடத்துக்கலந்தினிதருளி யென்னுந் திருவாசகச் செய்யுளடியால், கல்லாடமென்னுந்திருப்பதி யொன்றுளதென்று தெரிகிறது. கடைச்சங்கப்புலவராய கல்லாடனாரும் கல்லாடமியற்றிய விரண்டாங்கல்லாடனாரும் அத்திருப்பதியிற்றோன்றியவர்களா யிருத்தலும் கூடும். கல்லாடமுடையார் குமாரதெய்வத்தை வழிபடுகடவுளாகக் கொண்டவரென்பதும், மதுரையைச் சார்ந்த திருப்பரங்குன்றத்திடத்து மிக்க அன்புடையவரென்பதும், இந்நூலாராய்வார்க்கு இனிது புலனாம். - ! இனி , இக்கல்லாடமியற்றப்பெற்ற காலத்திற்குப் பன்னூற்றாண்டுகட்குப் பின்னர் விளங்கிய ஒருபுலவர் இந்நூலில் சொற்செறிவும் பொருளாழமுங் கண்டு வியந்து, இதனையியற்றியவர் கடைச்சங்கப் புலவராய கல்லாடனாரேயென்றெண்ணி, முற்குறித்துள்ள சிறப்புப்பாயிரச்செய்யுட்களையியற்றி, இந்நூலோடு சேர்த்தெழுதிவைத்தனராதல் வேண்டும். இதனால், கல்லாடனார் இருவரிருந்தனரென்னும் உண்மை தெரியாத காலத்து, இந்நூற்குச் சிறப்புப்பாயிரச் செய்யுட்களியற்றப் பெற்றன வென்பது நன்கு வெளியாகிறது. இதுகாறுங்கூறியவற்றால், கல்லாடரென்னும் பெயர்பூண்ட புலவர்கள் இருவரிருந்துள்ளார்களென்பதும், அவர்களுள் இராண்டாம் கல்லாடனாரே 'கல்லாட' மென்ற நூலியற்றியவ ரென்பதும், இவர் கி.பி. 13-ஆம் நூற்றாண்டிற்குப் பின்னரே இத்தமிழகத்தில் வாழ்ந்தவரென்பதும் பிறவும் நன்கு விளங்கிநிற்றல் காண்க.