பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



151) 33. தமிழ் இலக்கியச் சாதச் சுருக்கம் நம் தமிழ்மொழி பழமை வாய்ந்த சார்ந்த கோழிகளுள் ஒன்று; இலக்கண வரம்பும் சொல் வளமும் ஒருங்கே அமையப் பெற்றது; தொன்றுதொட்டுப் பேரறிஞர்களால் போற்றி வளர்க்கப்பெற்றுவரும் பெருமையுடையது; இயல், இசை, நாடகம் என முத்தமிழாக அறிஞர்களால் ஆராயப்பெற்றது; கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு ஆகிய மொழிகளுக்குத் தாய்மொழியாயுள்ளது. இவ்வுண்மையினை அம்மொழியாளர்கள் ஏற்றுக்கொள்ளாவிடினும், காய்தல் உவத்தலின்றி நடுவு நிலைமையுடன் மொழிகளை ஆராயும் பேரறிஞர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். வடநாட்டு மொழிகள் எல்லாவற்றிற்கும் வடமொழிதாய்மொழியாயிருத்தல் போல், தென்னாட்டி லுள்ள தமிழ் , தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகிய மொழிகட்குத் 'திராவிடி' என்ற தாய்மொழி ஒன்று இருந்தது என்பது தமிழரல்லாத பிற மொழியாளர் சிலருடைய கொள்கை. அஃதுண்மையாயின் பல மொழிகட்குத் தாய்மொழியாகவுள்ள வடமொழி இக்காலத்தும் தன் பெருமை குன்றாமல் சிறந்த நிலையில் இருத்தல்போல், தென்னாட்டு மொழிகளுக்குத் தாய்மொழியாக ஒரு சிலரால் சொல்லப்படும் 'திராவிடி' என்ற மொழியும் இந்நாளில் நம் தென்னாட்டில் நூலளவிலாவது இருத்தல் வேண்டுமன்றோ ? அத்தகைய மொழி ஒன்று முற்காலத்தில் நம் நாட்டில் வழக்கில் இருந்தது என்பதற்கு எத்தகைய சான்றுகளும் யாண்டும் கிடைக்கவில்லை என்பது அறிஞர்கள் பலரும் அறிந்ததொன்றாகும். எனவே, 'திராவிடி' என்ற மொழி யொன்றை அதன் பெயரளவில் தாமே புதிதாகப் படைத்துக்கொண்டு, அது தமிழ், தெலுங்கு முதலான மொழிகளுக்குத் தாய்மொழி என்று கூறுவதற்குச் சிலர் முன் வந்தமை அறியாமையால் நிகழ்ந்ததன்று; வேண்டுமென்றே அக்கருத்தை அன்னோர் எங்கும் பரப்புவதற்குயென்று கொண்டிருத்தல் அறியத்தக்கது. அவர்கள் அவ்வாறு செய்வதற்குக் காரணம் தமிழ்மொழியைத் தென்னாட்டு மொழிகளுக்குத் தாய்மொழியாக ஏற்றுக் கொண்டு அதற்கு முதன்மையும், தனிச்சிறப்பும் அளித்தற்குச் சிறிதும் இடங்கொடுத்தல் கூடாது என்ற எண்ணமேயாம். அவர் களுடைய கருத்தும் முயற்சியும் எவ்வாறிருப்பினும் உண்மைக்கு மாறான கொள்கை எதுவும் நிலைபெறாது; காலப்போக்கில் மறைந்து ஒழிந்துவிடும் என்பது திண்ணம். ஆதிகாலம் இனி, தமிழ்மொழியின் இலக்கியப் பரப்பினைக் -- காண்போம். இம்மொழி, பண்டைக்காலத்தில் முதல், இடை, கடை